சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்வதைப் போல உணர்கிறேன் என்று இராஜங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.2015 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான கட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டதா என்று சந்தேகிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொத்தமல்லி என்று கூறி உக்ரைனில் இருந்து 28 விவசாயக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இதன் பின்னால் ஒரு பிரபலமான ஒருவரின் மகன் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக lankatruth.com தெரிவித்துள்ளது.

பசில் ராஜபக்ஷவின் அழுத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல பௌத்த துறவிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக அரச உள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் பார் அசோசியேஷன் தேர்தலுக்காக டிசம்பர் 18 அன்று ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தைத் தொடர்ந்து, இலங்கை ராணுவ நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் அவர்களது அலுவலகத்தில் உள்ள மற்ற அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குளியலறையில்  வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு காயப்பட்ட தனது தாயை வேறு வழியின்றி அரச வைத்தியசாலைக்கு எடுத்துச்  சென்றபோது அவருக்கு கொரோனா என்று சொல்லி எரித்தார்கள் முஸ்லிம் தாய்க்கு நடந்த கொடூரம், இன்று பலாத்காரமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1000 ரூபாய் வழங்க பிராந்திய பயிர்ச்செய்கை நிறுவனங்கள் (RPCs) இணங்கியுள்ளதாக ‘அருன’ என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

சட்டத்தரணிகளான ஷிரால் லக்திலக மற்றும் கீர்த்தி தென்னகோன் மற்றும் அசாத் சாலி உட்பட இரண்டு முன்னாள் ஆளுநர்னர்களும் சஜித்தின் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது, சஜித் பிரேமதாச தலைமையிலான 'சமகி ஜன பலவேகய' அதிகாரிகள் அவர்களை எந்த பதவியிலும் நியமிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் மற்றும் லக் சதொச ஆகிய நிறுவனங்கள் அடுத்த திங்கட்கிழமை முதல் இரண்டு புதிய தலைவர்களைக் கொணடு இயங்கவிருப்பதாக வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, சிறைச்சாலை தலைமையகத்தின் பிரதி ஜெனரலாக பணியாற்றிய வழக்கறிஞர் வெணுர குணவர்தன, இ.தொ.காவின் தலைவராகவும், சிவில் பாதுகாப்புத் துறையின் முன்னாள் பணிப்பாளருமான ரியர் அட்மிரல் ஆனந்தா பீரிஸ் ஆகியோர் புதிய தலைவர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அரச சேவையில் இணைந்துகொண்ட, பல்லாயிரக்கணக்கான புதிய பெண் பணியாளர்களின்  மகப்பேற்று விடுமுறையை  பாதியாகக் குறைப்பதற்கான, நிலையான விதிமுறைகளை மீறும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பணத்திற்காக  குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.47 வயதான சந்தேக நபர் 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் இருந்து 200 பணக்காரர்களுடன் இலங்கைக்கு வரவிருந்த AEROFLOT விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஐரோப்பா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபு காரணமாக விமானம் ரத்துச் செய்யப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாய சட்டங்களை ஓராண்டுக்கு செயல்படுத்திப் பார்ப்போம். அவை விவசாயிகளுக்குப் பலன் அளிக்காவிட்டால் அவற்றைத் திருத்துவோம் என்று கூறியுள்ளார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.இந்த 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், பாஜக இந்த சட்டங்களுக்கு ஆதரவாக பல விதங்களில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.

மஹிந்தமீது கருத்துதடைகளை வைக்குமாறு தேசிய அமைப்புகள் பசிலிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை பத்திரிகைக் குழுவின் மூத்த விரிவுரையாளரும்,  அதனது தலைவருமான மஹிந்த பதிரன அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தேசிய அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகயவின் அரசியலமைப்பு கட்சியின் இடைக்கால செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது கடந்த சனிக்கிழமை பண்டாரவல ஹோட்டலில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் நடைபெற்றுள்ளது.அரசியலமைப்பின் படி, கட்சித் தலைவர் பதவி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள்,துணைத் தலைவர் அல்லது துணைத் தலைவர்கள் ஆகிய நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. அரசியலமைப்பின் படி, கட்சித் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் செயற்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

கொரோனா ஒழிப்பிற்கான தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ள நிலையில், கேகாலையை சேர்ந்த தம்மிக்க பண்டார தயாரித்த பாணி மருந்து இலங்கையில் அநேகமானவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த மருந்து தொடர்பில் ஆராய்ந்த ஆயுர்வேத திணைக்களம் தம்மிக்க பண்டாரவிற்கு ஆயுர்வேத மருந்து உற்பத்தி நிலையமொன்றை பதிவு செய்வதற்கான எழுத்துமூல அனுமதியை வழங்கியுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி