வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு 1414 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் இவ் ஆண்டு ஜெனிவா மனிதவுரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முக்கிய தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஐமக் முன்பே ஒரு முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியிருக்கிறார்ஆப்கானிஸ்தான் மத்திய மாகாணமான கோரில் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மட்டக்களப்பில் பெய்து வரும் மழையினால் சில பகுதிகளில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளது.மட்டக்களப்பு – கிரான், புலிபாய்ந்தகல் பாலத்தை ஊடறுத்து வௌ்ளம் பாய்வதால் அந்த வீதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ருவாண்டா இராணுவம் சோழச் செய்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்புழு பூச்சியை அழிக்கஇராணுவத்தில் உள்ள விவசாய நிபுணர்களினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'பைரெத்ரம்' (pyrethrum)  என்ற பூச்சிக்கொல்லி இலங்கையில் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், மீன் மற்றும் பாலூட்டிகள் உட்பட பல விலங்குகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று பூச்சிக்கொல்லிகள் சம்பந்தமான பதிவாளர் கூறுகிறார்.

கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கோரி புத்தாண்டின் தொடக்கத்தில் மன்னாரில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கட்சி அரசியலில் தலையிட ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷஇந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லட்சுமண பிரேமச்சந்திர படுகொலை தொடர்பாக தற்போது மரண தண்டனை குற்றவாளியாக இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லாரன்ஸ் ரெமோலோ துமிந்த சில்வா (ஆர். துமிந்த சில்வா) க்கு ஓரளவு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

புதிய ஆண்டின் தொடக்கத்தில் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்துங்கள் முஸ்லிம் மக்களை மகிழ்விக்கும் வகையில் செயல்படுமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்."நாங்கள் ஒரு புதிய ஆண்டை எதிர்கொள்கிறோம். நாளை நம் முஸ்லிம் மக்களின் இதயங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்."

தமது கவலையை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு எதிராக கல்வி அதிகாரிகள் எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.சமூக ஊடகங்களில் தமது கவலையை வெளிப்படுத்திய ஆசிரியரிடம் காரணம் கோரி கடிதம் அனுப்புவது சட்டபூர்வமான விடயமல்லவென, இலங்கை ஆசிரியர் சங்கம், ஸ்ரீ ஜயவர்தனபுர  வலயக் கல்வி அலுவலக பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

மஹர சிறைச்சாலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளின் உரிமைகளை பறிக்க சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகள் நீதிமன்றத்தில் தோல்வியடைந்துள்ளன.பதினொரு பேரைக் கொலை செய்த மற்றும் 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைத் தாக்குதலில் பலியானவர்களை பிரதிநிதித்துவப்படுத்த சட்டத்தரணிகளுக்கு முடியும் என வெலிசர நீதவான் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டார்.

மாகாண சபைத் தேர்தலில் எதிர்பார்க்கும் அளவு வேட்பாளர்களை தமது கட்சிக்கு ஒதுக்குவதற்கு ஆளுங்கட்சி தவறினால், தனித்துப் பயணிப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகர சிறைச்சாலையில் நடந்த 11 பேரின் படுகொலை மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள், , சிறைக்குள் சித்திரவதை செய்யப்படுவதாக நாட்டின் முன்னணி உரிமைகள் குழு குற்றம் சாட்டுகிறது."இந்த சாட்சிகள் இன்று இந்த கொலைகாரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நாங்கள் தொடர்ந்து கூறுகிறோம். இந்த ஆதாரங்களை எப்படியாவது புதைக்க அவர்கள் கடமையாக முயற்சி செய்கிறார்கள்."

ஒவ்வொரு அமைச்சிலும் மேம்பாட்டு செயலாளர் என்ற புதிய பதவி நிறுவப்பட்டுள்ளது உள்ளூர் அரச வட்டாரங்களின்படி, ஓய்வுபெற்ற மூத்த இராணுவ அதிகாரிகளை நியமிக்க ஜனாதிபதி பரிசீலித்து வருவதாக அறியக்கிடைக்கின்றது.

கிழக்கு சிரியாவில் பேருந்து ஒன்று தாக்கப்பட்டதில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிப்பாய்கள் என்று கூறப்படுகிறது.அதே நேரம், சிரியாவின் அரசு ஊடகம் இறந்தவர்கல் அனைவரும் குடிமக்கள் என்று கூறுகிறது.பதற்றம் மிகுந்த டெய்ர் அல்-ஜோர் மாகாணத்தில் புதன்கிழமை நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. ரஜினியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்த ஒரு சில ரசிகர்கள் கோபமும் அடைந்துள்ளார்கள்.தமிழகத்தில் இதுவரை பல நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கியிருந்தாலும், அரசியல் கட்சியை தொடங்காமல் தனது பயணத்தை ரஜினி நிறுத்திக்கொண்டார் என்பது ரசிகர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி