சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்வதைப் போல உணர்கிறேன் என்று இராஜங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.2015 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான கட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டதா என்று சந்தேகிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கஹடகஸ்திகிலியவில் உள்ள ரன்பத்வில்லா சந்தி பகுதியில் வசிப்பவர்கள் 25 ஆம் திகதி ரன்பத்வில்லா சந்திப்பிலிருந்து கட்டுகுலியாவ உள்ளிட்ட பல கிராமங்களை இணைக்கும் வீதியை உடனடியாக சீர்செய்யக் கோரி போராட்டம் நடத்தினர்.

நேற்று (26) அனுராதபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் அனுராதபுர மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல்வாதி சாலையை சரிசெய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்போது இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார் என்று குற்றம் சாட்டினார்.

இருப்பினும், இதுபோன்ற சதிகாரர்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் வலியுறுத்தினார்.

இப்போராட்டம் சமீபத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், தயாசிறி ஜயசேகர அரசாங்கத்திற்கு எதிராகக் கூறிய குற்றச்சாட்டின் விரிவாக்கம் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி