உள்ளூர் ஊடகங்களுக்கு ஒரு கறுப்பு சகாப்தம் உதயமாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன கூறியுள்ளார்.


நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடைந்து வரும் நிலையில் இந்த வருட இறுதிக்குள் அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபாவை எட்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் பெருமதி உண்மையான 250 ரூபாய். இதனை கட்டுப்படுத்த முடியாது போனால் இந்த ஆண்டு இறுதிக்குள் டொலரை் ஒன்றுக்கான பெருமதி 300 வரை உயரும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார்.


எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் தமது எதிர்பார்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்திவரும் நிலையில் தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.


இலங்கைக்கு போதியளவு டீசல் கையிருப்பு கிடைத்துள்ளதுடன், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


இந்திய -இலங்கை எல்லைகளில் மீன்பிடி நடவடிக்கை காரணமாக இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே மோதல்கள் தொடர்கதையாக உள்ளன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தனது 2022 ஆம் ஆண்டுக்கான வீதி வரைபடத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முற்றாக நீக்குமாறு கோரியுள்ளது.


இலங்கை தொடர்பான தீர்மானங்களைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த வாரம் கூடவுள்ளது.

நாட்டில் எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒன்பது நாட்களாக சுகாதாரத்துறையுடன் இணைந்த 18 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்கப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளன.


வாகன இறக்குமதிக்கான தடையை மீறி வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் 25 வீத மேலதிக வரி அறவிடப்பட மாட்டாது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (14) இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இலங்கையின் மனித உரிமைகள் சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதனின் கருத்துக்களை விமர்சித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கைக்கு, என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட எட்டு மனித உரிமைக் குழுக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறிமுறையின்போது மேற்படி மக்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா பிரயோகிக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்தார்.



தொடர்ந்து ஒன்பதாவது நாளாகவும் சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதன் காரணமாக ஆயிரக்கணக்கான நோயாளர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

உண்மையில் எமது நாட்டுக்கு புதுமையான ஒரு கருமம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு உட்பட்டு மக்கள் சாவுக்கு கிட்ட நெருங்கி உள்ளார்கள்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி