ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது இன்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.


பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைத்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிலியந்தலையைச் சேர்ந்த வைத்தியர் ஷெர்லி தயானந்த ஹேரத்தை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பொது எதிரணி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று தெரிவித்தார்.

Feature

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணையொன்றுக்கமைய, சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி சமூக செயற்பாட்டாளர் ஷெயான் மாலக்க கமகே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.



தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இருவேறு கடிதங்களை இறுதி செய்வதற்காக கூடிக்கலந்துரையாடவுள்ளனர்.

இலங்கையின் தற்போதைய நிலை மிக மோசமாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபைக்கு நேரடியாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசாங்கம் மற்றும் லங்கா IOC நிறுவனத்துடன் இரண்டு சுற்று பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும், அதன் பதிலுக்காக காத்திருப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.

கடினமான பொருளாதார தீர்வில் சிக்கித் தவிக்கும் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அழைப்பின் பேரில் தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான 2022 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அவர் அங்கு சிறப்புரை ஆற்றும் போதே இதனை கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு கடுமையான பிரேரணையைக் கொண்டு வருவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 9 ஆம் திகதி புதிய பயணம் என்று மொட்டுக் கட்சியினுடைய முதல் மக்கள் கூட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மொட்டுவின் ஆண்மீக தலைவர் மஹிந்த தான் புதிய பயணம் தொடர்பில் குறிப்பிட்டார்.

– நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

நுவரெலியா மாநகர சபைக்கு இருபத்து ஜந்து கோடியே நாற்பத்து ஏழு இலட்சத்து என்பத்து ஆறாயிரத்து எழுநூறு ரூபா (25 47 86 700)வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உதவுவதற்காக நாட்டில் உள்ள அனைத்து வயல்கள் மற்றும் பயிரப்படும் இடங்களுக்கும் தலா ஒரு இராணுவ வீரர் வீதம் அனுப்பி வைக்கப்படுவர் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை ஆணையத்தின் தலைமைப் அதிகாரி அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி