அமைச்சுக்களின் பணியை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அமைச்சுக்களின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவருடகாலத்துக்கு ஒத்திவைத்திருக்கின்ற போதிலும் இந்த வருடம் பெரும்பாலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த முடியுமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புன்சி ஹேவா தெரிவித்தார்.


குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நேற்று (18) தம்மைக் கைது செய்யவோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கவோ இடைக்காலத் தடையுத்தரவைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கச்சத்தீவில் வருடாந்தம் நடத்தப்படும் புனித அந்தோனியார் பெருவிழாவில் கலந்து கொள்ள இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் எவருக்கும் இம்முறை அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.


“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் அல்லது முழுமையாக மாற்றப்பட வேண்டும்" என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்து 65 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.


வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டல்களை இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.


இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், ‘தெமட்டகொட ருவானில்’ கைப்பற்றப்பட்ட சொத்துக்களே அதிக மதிப்புடையவை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆளும் கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சர்களுக்கிடையிலான பனிப் போர் தற்போது வெடிக்க ஆரம்பித்துள்ளன.

இதில் இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சாவிற்கு அரசாங்கத்தில் உள்ள மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் தொலைபேசியில் மிரட்டும் ஒலிப்பதிவொன்று வெளியாகியுள்ளது.

கம்பஹாவில் உள்ள "சிதுசர" என்ற உயர்தர மாணவர்களுக்கான தனியார் கல்வி நிறுவனத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் சிசிடிவி கமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு என்பது தெளிவாகத் தெரிந்தால், தேவைப்பட்டால் அவரைக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 15 பேரின் பெயர்களை அங்கீகரித்ததன் காரணமாக நீதித் துறையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அரசாங்கத்தை விமர்சித்து சில பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தேசிய மட்டத்தில் அரசியல் பிரச்சாரத்தை அலரிமாளிகையில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி