இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்து 65 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.


ரஷ்யாவும் இலங்கையும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளதாகவும் சர்வதேசத்தில் பல முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆக்கப்பூர்வமான தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் அவர் தெரித்துள்ளார்.


ரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ரஷ்ய-இலங்கை உறவுகளை அனைத்து துறைகளிலும் இரு நாடுகளும் மேலும் விரிவான முறையில் அபிவிருத்தி செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


அத்தோடு நாடு மக்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக வாழ்த்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

Ru.jpg

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.


https://bit.ly/3uHGkH

 

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி