அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மாலை முதல் நேற்று 10ம் திகதி 15 வது நாளாகவும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்து வருவதனால், இப்பிரதேசங்கள் எங்கும் சனநடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இலங்கை அமைச்சரவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர், ஊழல், மோசடி அல்லது கொலை குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளவர்கள் என சர்வதேச அளவிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

அடுத்த வருடம் முதல் முதலாம் தரத்தில் மாணவர்களின் எண்ணிக்கை 35ஆக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள கல்விச் செயலாளரே, வரம்பிற்கு அப்பாற்பட்டு பிரபலமான பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மஹர சிறைச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 கைதிகளின் உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி நீதிமன்ற உத்தரவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

ரத்கம கடுதம்பே பொல்கஸ்துவ பகுதி விஹாரை ஒன்றில் மத நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த தேரர் ரத்கம ஆற்றில் உயிரிழந்த நிலையில் தேரரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன. 

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் வியாழக்கிழமை 15ஆவது நாளாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முன்மொழிவை விவசாயிகள் நிராகரித்து விட்டதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக பல்வேறு சமரச முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 

மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பாராளுமன்றில் வைத்து நீங்கள் நடிகர் ரஜினிகாந்தை போன்றவரா என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். 

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, பெண்கள் அதிகமாக துணைவரினால் வன்முறைக்குட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக இறந்த நிலையில், உறவினர்களால் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படாத உடல்களை தகனம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவிற்கு, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா அறிவுறுத்தியுள்ளார். 

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்மொழிந்த வரைவு யோசனையை நிராகரித்துள்ள விவசாயிகள், வரும் 12ஆம் தேதி டெல்லி - ஜெய்பூர் நெடுஞ்சாலையை முடக்குவதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்பாக வரும் 14ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

இலங்கை பாடசாலை அதிபர் பதவிகளுக்கு, பதில் அதிபர்களை சட்டவிரோதமாக தரமுயர்த்தும் ஏற்பாடுகளை கல்வி அமைச்சு எடுத்து வருவதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. 

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. போலி சாட்சியம் தயாரித்து, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பல் ஷானி அபேசேகர மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே இவ்வாறு பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.  

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது தனது சகோதரர் வேண்டுமென சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, உயிரிழந்த கைதி ஒருவரின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார். 

தம்மிக பண்டார என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கொவிட் வைரஸை ஒழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சாதிக்காயாக இருந்தாலும் அது சம்பந்தமான நோய்களுக்குப் பயன்படுத்தப்படுவதல்ல என ஆயுர்வேத விசேட வைத்தியர் ஆனந்த விஜேரத்ன கூறுகிறார்.

இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் உதயகம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி