நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள
அதேவேளை, கொலையாளி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மிட் டவுன் மன்ஹாட்டனின் அலுவலகம் கட்டடம் உள்ளது. 634 அடி உயரமுள்ள இந்த வானளாவிய கட்டடத்தில் புகுந்த மர்மநபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், “மிட் டவுன் மன்ஹாட்டனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், நியூயோர்க் பொலிஸ் அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
“துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். 27 வயதான சந்தேகநபர், ஷேன் தமுரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்” என்றார்.