"அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட தனிமனித சுதந்திரம், தனியார் சட்டங்களுக்கான அவகாசம் என்பவற்றை கருத்தில் கொண்டு, தனியார் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாமே தவிர, முஸ்லிம் தனியார் சட்டத்தை முழுவதுமாக நீக்க வேண்டுமென்கின்ற முயற்சிகளுக்கு, எனது வன்மையான எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்" என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் இன்று (09.02.2021) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தெரிவித்துள்ளார்.

இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமகால அரசியலில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2015 ல் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முடிவடைந்ததும் மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவன் என்ற வகையில்

அமைச்சர் விமல் வீரவன்சவை அமைச்சரவையில் இருந்து உடனடியாக வெளியேற்றுமாறு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மொட்டு கட்சியின் மூத்த தலைவர்களின் கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளனர்.

ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ மற்றும் சுற்றுச் சூழல் நீதி மையத்தால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காலாகாலமாக எமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின் ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்தக்கூடாது. எமது ஒற்றுமையை குலைத்து விடாது நாங்கள் எல்லோரும் ஒருமித்த வகையில் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி தீர்த்துக்கொள்ளலாம்.

அடக்குமுறைக்கு தான் அடிபணியப் போவதில்லையென்றும் தொடர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாகவும் பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருக்கும் வி.கே. சசிகலா தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு வெளியே உள்ள தீவுகளில் மீளுருவாக்கக் கூடிய மூன்று  எரிசக்தி திட்டங்களைத் தொடங்க சீன நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்ப்பதாக ” தி சண்டே டைம்ஸ்” தெரிவித்துள்ளது.

ஆளும் கட்சிக்குள் தனி பிரிவுகளுக்கு இடமில்லை என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தராகண்ட் மாநிலத்தில் சமொலி மாவட்டத்தின் ராய்னி கிராமத்தில் தபோவன் பகுதியில் இன்று (பிப்ரவரி 7, ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட ஒரு பெரிய பனிச்சரிவு மற்றும் அதனால் நதிகளில் உண்டான வெள்ளம் ஆகியவற்றால், இதுவரை குறைந்தது 10 பேர் இறந்துள்ளது உறுதியாகியுள்ளது.

தமிழர்களின் உரிமைகளை கோரும் நோக்குடன் நடத்தப்பட்ட பாரிய போராட்ட பேரணி, இன்றுடன் (பிப்ரவரி 07) நிறைவடைந்தது. கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் முதல் வடக்கு மாகாணத்தின் பொலிகண்டி வரை தமிழர்களின் உரிமைகளை கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.பொத்துவில் பகுதியில் கடந்த 3ம் தேதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி