சனச அபிவிருத்தி வங்கியின் நிர்வாகம் வங்கியை வேண்டுமென்றே நட்டமடையச் செய்வதாகவும், அதை எதிர்க்கும் தொழிற்சங்கத் தலைவர்களை பதவி நீக்கம் செய்யும் இழிவான முயற்சிகளை மேற்கொள்வதாகவும், நாட்டின் பிரதான வங்கிச் ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்ட அரசாங்கம் மேற்கோள் காட்டிய புள்ளிவிபரங்களை கேலி செய்துள்ள பேராசிரியர் ஒருவர், சுகாதார சேவைகள் பணிப்பாளரை மீண்டும் க.பொ.த சாதாரண தர கணிதப் பாட பரீட்சைக்கு தோற்ற வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளார்.

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை உடனடியாகக் கைது செய்து, சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கடுவளை நகர சபை உறுப்பினர் போசெத் கலெஹிபத்திரன தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

கல்வி அமைச்சால் வெளிடப்படவுள்ள பரீட்சை ஒத்திவைப்பது தொடர்பான முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுச் சேவைத் துறையில் காவல்துறை மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனமான பதிவாகியுள்ள அதே வேலை அதற்கு அடுத்தபடியாக ஊழல்வாதிகளாக நாடாளுமன்றம் உள்ளிட்ட அரச மற்றும் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் பதிவாகியுள்ளனர்.

ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருக்கும் ராஜபக்ஷ சகோதரர்கள் தலைமையிலான அரசாங்கம் பௌத்த  பாரம்பரியங்களை பாதுகாக்கும் என மக்கள் வைத்த நம்பிக்கை சிதைந்துவிட்டதாக, சிங்கள பௌத்த அமைப்பு ஒன்று  கவலை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாகவும் இலங்கையின் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இடம்பெற்ற அதிகளவான வன்முறைச் சம்பவங்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான கட்சி மீது அதிகளவு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றிய ஒரு சிலர் அடையாளம் காணப்பட்டதன் பின்பு ராஜாங்கன பிரதே யாய 1,3. மற்றும் 5 ஆகிய வலயங்களில் வசிக்கும் 12,000 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.

சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்புப் படையினரிடம் கையளிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலமை கருத்திற் கொண்டு தேர்தலை ஒத்திவைப்பது தேவையாற்ற விடயம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைக்கைதி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் 492 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாலிவுட் திரைப்பட உலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி