பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள, அன்செல் லங்கா நிறுவன நிர்வாகம், ஏழு வருடங்களுக்கு முன்னர் பணிநீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்காக, அவுஸ்திரேலியாவில் ஜனவரி 21ஆம் திகதி ஒரு புதிய சர்வதேச ஒத்துழைப்பு பிரச்சாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு ஏற்ப கட்டாய தகனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி முஸ்லிம் இடது முன்னணி இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு மஹஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

முருத்தெட்டுவே தேதரின் பிறந்தநாள் விழாவின் போது நாட்டிலுள்ள மூன்று கேள்விகளுக்கான பதில் கிடைத்தது

நீதித்துறையில் முறையான நிர்வாகம் இல்லாததால் ரஞ்சன் சிறையில் அடைக்கப்பட்டாரா?

"நாங்கள் இதனால் மிகுந்த வருத்தமடைகிறோம், ஏனென்றால் மீனவர்களாகிய அவர்கள் மீன்பிடி குடும்பங்களின் அவலநிலையை அறிந்திருக்கின்றோம், அவர்கள் இந்தியாவில் உள்ள தமிழக மீனவர்களாக இருந்தாலும், எங்கள் சகோதரர்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து நாங்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம் . "

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்களை அபகரிக்கும் முயற்சிகளை எதிர்த்துப் போராட தமிழ் அரசியல் ஓரணியில் இணைந்துள்ளன.

இந்தியாவில் இருந்து நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும், கொவிட்க்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கும் ஏற்றப்படவுள்ளது.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற வி.கே. சசிகலா இன்று (ஜனவரி 27, புதன்கிழமை) விடுதலையானார்.4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, 10 கோடி ரூபாய் அபராதமும் செலுத்திவிட்டதால், பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எல்லையில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு இன்று மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த இந்திய மீனவர்கள் நான்கு பேருக்கும் மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம் சாட்டியுள்ளார்.அத்தோடு, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால், தான் பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை. ஏன் எனில் எங்ளுடைய மொழி புறக்கணிக்கப்படும் இடத்தில் நான் கலந்துகொள்வது பொருத்தம் இல்லை எனவும் தெரிவித்தார்.

எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோதாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி போய் தத்தளிக்கிறது. வினை விதைத்தவன், வினையையே அறுப்பான் என்ற சான்றோர் மொழிக்கு உதாரணமாக திகழ்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச அவர்களின் மனைவியின் தந்தை (Father in law)  திலக் வீரசிங்க அவர்களும்  இளைய புதல்வரான யோசித்த ராஜபக்ச அவர்களின் மனைவியின் தாய் (Mother in law) டைட்ரேடி லிவேரா அவர்களும் அரச நிறுவனமான Airport and Aviation (Services) Sri Lanka Limited நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர் .

சுற்றுச்சூழல் ஆர்வலறும் ஊடகவியலாளறுமான லக்மல் ரனபாஹு சிங்கராஜ வனப்பகுதிக்கு  குறுக்காக சாலை அமைப்பதற்கு எதிராக குரல் எழுப்பி வந்த நிலையில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலை சுற்றுச்சூழல் அமைப்பு வண்மையாக கண்டிக்கிறது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி