கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்மக்களும்,முஸ்லிம்மக்களும் ஒற்றுமையாக செயற்படுவதை அவதானித்த ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும்,முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்து தங்களின் குறுகியகால அரசியலுக்காகவும்,தங்களின் அரசியல் வியாபாரத்திற்காகவும்,அரசியல் இருப்பு வீழ்ச்சி காணும் என்பதற்காவும் எடுத்த நடவடிக்கைதான் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம்குறைத்து அனுப்பப்பட்ட கடிதமாகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணாக்கியன் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாட்டினை முழுமையாக முடக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை, ​உடனடியாக விடுவிக்கக் கோரி இன்று (28) போராட்டம் நடைபெற்றது.

குவஹாத்தி தாஜ் விவாந்தா ஹோட்டலில் நிலநடுக்கத்தின் தாக்கம் அசாம் மாநிலம் சோனித்பூரை மையமாக கொண்டு பலத்த நிலநடுக்கம் ஒன்று இன்று புதன்கிழமை காலை 7.51 மணி அளவில் ஏற்பட்டது.

கவிதை புத்தகம் எழுதியதற்காக கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் தடுத்து வைக்கப்பட்ட இளம் முஸ்லிம் கவிஞர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிக்கை அளிக்காததற்காக அச்சுறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை முற்றிலுமாக தடை செய்ய ஜனாதிபதியால்  அமைச்சரவையில் நேற்று (27) சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார்.இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

புர்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் ஒக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதை கருத்திற் கொண்டு தமிழகத்தின் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிஜன் தயாரிப்புப் பணிக்காக மட்டும் இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது பயணத்தைத் தடுத்து நிறுத்துபவர்களுக்கு உடனடியாக கட்சியை விட்டு வெளியேறுமாறு சமகி ஜன பலவேகய சஜித் பிரேமதாச அறிவுறுத்தியுள்ளார். கடந்த காலத்தைப் போலவே தனது வேலையில் யாரையும் தலையிட அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், நாட்டின் அதிகாரபூர்வமற்ற ஜனாதிபதியாகவும் கருதப்படும் பசில் ராஜபக்ஷவின் 70 வது பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27). அவர் ஏப்ரல் 27, 1951 இல் பிறந்தார்.

இணையத்தளத்தின் ஊடாக விளம்பரமொன்றை வெளியிட்டு, இந்திய பிரஜைகளை இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் எண்ணெய் உற்பத்தியில் இரண்டாவது நாடாக விளங்கும் சவுதி அரேபியா, அதன் உள்நாட்டு எண்ணெய் நுகர்வினை குறைக்க திட்டமிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவும் இந்த சூழலில் வீடுகளிலும் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி