கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கல்முனையில் இடம் பெற்றுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி பேரணிக்கு எதிராக  கல்முனை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மே தின கூட்டங்களை நடத்துவதற்கும், பேரணிகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நிகழ்நிலை ஊடாக நாளை மே தின கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ரத்த தானம் செய்துவந்த தன்னார்வலர்கள் பலர், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால், ரத்த வங்கிகளில் இந்த ஆண்டு ரத்த சேமிப்பு கணிசமாக குறைந்துள்ளது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கை நிலையத்தினால் 02.05.2021 ஆம் திகதி நடத்தப்படவிருந்த ஆங்கில டிப்ளோமா பாடநெறி மற்றும் ஆங்கில சான்றிதழ் பாடநெறி (Diploma in English and Certificate in English 2019/2020) ஆகிய கற்கை நெறிகளுக்காக மாணவர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப்பரீட்சைகள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என வெளிவாரி பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலைய உதவிப்பதிவாளர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது பரவி வரும்  கொரொனா வைரஸின் புதிய திரிபுகளிலிருந்து கர்ப்பிணித் தாய்மார்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத்தினர் எடுத்துரைத்துள்ளனர்.

அரச புலனாய்வு அதிகாரிகள் அரச சார்பற்ற தொண்டு நிறுவன ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படையாகவே சேகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அவர்கள் தமது உயிர் அச்சுறுத்தல் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு போர்ட் சிட்டி வேலைத்திட்டத்தின் உத்தேச ஆணைக்குழுவுக்கான தலைவராக ஹான்ஸ் விஜேசூரிய நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்துள்ள நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடதுகரை பகுதியில் இடம்பெற்ற தீ பரவலில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

நடுநிசியில், கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை, தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காது விடுதலை செய்யுமாறு கோரி, வன்னி மக்கள் வவுனியா கச்சேரிக்கு முன்னாள் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள சுகாதார அலுவலர் அலுவலகத்தின் 15 பகுதிகளில் 18பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுமார் நான்கு நாட்களாக அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

2005ஆம் ஆண்டு கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான தர்ம ரட்ணம் சிவராமின் 16 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை அளித்து உதவ ஐ.நா. முன்வந்த நிலையில், தங்களிடம் போதிய அளவில் உபகரணங்கள் இருப்பதாகக் கூறி அந்த உதவியை இந்தியா நிராகரித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

அரசாங்க அமைச்சருடன் மோதலின் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சிறைச்சாலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி