இலங்கை மக்கள் கொவிட் சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இரவு நேர களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக ஆளுநர் மாளிகையில் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். `அவரது அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்?' என்ற விவாதமும் முடிவுக்கு வரவில்லை. என்ன நடக்கிறது தி.மு.கவில்?

குருநாகல், மத்தளை, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை முழுமையாக நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஹிந்துக்களின் புனித நகரமான வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், கலாநிதி சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயை குணப்படுத்தும்  எனக்கூறி, இணையத்தில் விளம்பரப்படுத்தப்படும் மருந்துகளை பயன்படுத்த வேண்டமென சுதேச வைத்திய அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ஊடகவியலாளர்களின் படுகொலைகளை தண்டிக்காமல் தொடர்ந்து நழுவிச் செல்லும் போக்கானது,  இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு ஒரு பெரிய தடையாக இருப்பதை,ஊடக சுதந்திரத்திற்காக செயற்படும் ஒரு அமைப்பு மே 3ஆம் திகதி சர்வதேச ஊடக சுதந்திரத் தினத்தில் உலக மக்களின் கவனத்திற்கு  கொண்டுவந்துள்ளது.

`சமூக ஆர்வலர்' டிராஃபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். அவருக்கு வயது 88. `கோட் போடாத வக்கீல்' என்றழைக்கப்பட்ட டிராஃபிக் ராமசாமியின் மரணம் நீதித்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில். சாணக்கியன் எம்.பி   பேசும் போது   புலி என்று கூறியவருக்கான  பதிலடியுடன் இன்றைய தின உரை, Covid 19 இன் மூன்றாவது அலையினை எமது நாடு எதிர்நோக்கியுள்ளது. 700 பேர் மட்டில் இறந்துள்ளார்கள். இதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை விசாரிப்பதற்கென இதற்குரிய ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். எம் நாட்டு மக்கள் இறப்பதற்கு யார் காரணம் என்பதனை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதை நிறுத்த முடியாது. அவ்வாறு நிறுத்துவதாக இருந்தால், அதுதொடர்பான தீர்மானத்தை சுகாதாரப் பிரிவினரே மேற்கொள்ள வேண்டும். என்றாலும், தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் குறைவடைந்துள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களையும் கொரோனா வைரஸ் பாதிக்கத் தொடங்கியுள்ளது. கடுமையான பயோ பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச்செய்துள்ளது. 

கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தாலும் கூட, சின்னம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை விடுவிப்பதில், ஐக்கிய மக்கள் சக்தி தீவிர கரிசனை காட்ட வேண்டுமென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

2020ஆம் அண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி