சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், பொலிஸாரின் சமிக்கையை மீறி பயணித்தமையால், அதன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இறுதி யுத்த காலப்பகுதியான 2008 -2009 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்தி அச்சுறுத்தி கப்பம் பெற்ற மற்றும் காணாமல் போக செய்த, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நீக்க வேண்டாமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த மௌலவி அஹில் முஹம்மது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த இவர்  பொலிஸ் அதிகாரி சுபையிர் சார்ஜன் அவர்களின் மூத்த புதல்வராவார்.

எரிவாயு வியாபாரத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், பிரதமரின் பிரதம அதிகாரியுமான யோசித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலவசக் கல்வியின் இராணுவமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலை இலக்காகக் கொண்ட கொத்தலாவல சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மற்றும் பலவந்தமாக கைது செய்யப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள்,மாணவர்களின் தடுப்புக்காவலை நீடிக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினரால் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கான நடமாடும் வாகன சேவை இன்று (12) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

காட்டுத்தீயை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த தவறியதற்காக கிரீஸ் நாட்டின் பிரதமர் அந்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இலங்கை மிகவும் தீர்மானமிக்க நிலைமையை எதிர்நோக்கியுள்ள சூழலில், மக்கள் தற்போது தங்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றுவதை விட, அரசாங்கத்திடமிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள், ராஜபக்ச ஆட்சியில் வெறுப்படைந்துள்ளதாகவும், ஆகவே அரசியல் ரீதியிலான புதிய மாற்றம் ஒன்றிற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்களின் கடமைகளுக்குத் தேவையானவர்களை மட்டுமே அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களிடம் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்கள் மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுவரும் நிலையில் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் அம்பாறை மாவட்டத்தில் புதிய இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பிய தொழிற்சங்கத் தலைவரை பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் மிகப் பழமையான தொழிற்சங்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம் அனுப்பி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விசாரணையின்றி விடுவிக்க நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி