ஜெரூசத்தில் அல் ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உட்பட 2 பேரை இஸ்ரேல் பொலிஸார் கைது செய்து நீண்ட நேரத்தின் பின் விடுவித்துள்ளனர்.

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் பலவருடங்களாக உட்புகும் வழி, மண்ணால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதனால் ஆழ்கடல் மீனவர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் ஏனைய தங்கிவாழும் பல குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சுமார் 265 பெரிய படகுகள் காணப்படுவதுடன் 100 க்கும் கூடுதலான எண்ணிக்கையில் சிறிய படகுகளும் காணப்படுகிறது.

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சுற்றுசூழலை பாதுகாக்காவிட்டால் உலகம் அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.  உலக சுற்றுசூழல் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இம்ரான் கான் கூறியதாவது:-  புவி வெப்பமயமாதல் ஒட்டு மொத்த உலக நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது.

அரசு அடுத்த கொத்தணிக்கு தலைமை தாங்க தயாராகின்றதா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

பர்கினோ பாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்தனர்.ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் பொலிசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை ஒவரினால் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பதவியில் இருந்து விலகுமாறு கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை சிலவேளை ஜூன் 14ம் திகதிக்கு பின்பும் நீடிக்கப்படக் கூடுமென கண்டியில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல கூறியுள்ளார்.

கமத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.பி. ரோஹன புஷ்பகுமார அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் கட்டிடமொன்றில் சீன கொடி ஏற்றப்பட்டமை குறித்து தனக்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலக அளவில் இதுவரை விநியோகிக்கப்பட்ட 200 கோடி கொரோனா தடுப்பூசிகளில் 60 சதவீதம் மூன்று நாடுகளுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  9.57 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது என்பது, மனிதகுலம் இதுவரை சந்தித்த சவால்களில் மிகப்பெரியதாக இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, உலகம் எங்கிலும் இந்தப் பிரச்சனை குறித்து எல்லாக் கோணங்களிலும் தொடர்ந்து சிந்திக்கும் அதிசய மனங்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. பிபிசி-யின் புவியைக் காக்க 39 வழிகள் என்ற தொடரிலிருந்து சிறந்த, மாறுபட்ட ஆறு தீர்வுகள் இதோ.

கொடிய தொற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான வசதிகளுக்காக சுகாதார ஊழியர்கள் போராடுகின்ற சூழ்நிலையில், சுகாதாரப் சேவையை அத்தியாவசிய சேவையாக  பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பானது அடக்குமுறை நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள தொழிற்சங்கங்கள் இதனை கடுமையாக எதிர்த்துள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி