இந்தியாவில் கண்டறியபட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 53 நாடுகளில் காணப்படுகிறது! உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பு மே 25ம் தேதி முடிந்த வாராந்த உலகளாவிய தொற்று நோய் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது.
உலக சுகாதார அமைப்பு மே 25ம் தேதி முடிந்த வாராந்த உலகளாவிய தொற்று நோய் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது.
அவசரகால சூழ்நிலையில் செயல்படுவதற்கும் கொவிட்19 தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் செயல்முறைக்கு உதவுவதற்கும் பெண்கள் மோட்டார் படையணி யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் முழுமையாக அழிந்தால் இலங்கையில் அமில மழை பெய்யும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.உலக நாடுகளை துயரத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு இதுவரை பல லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். கோடிக்கணக்கானோர் பாதிப்படைந்து உள்ளனர். மனிதர்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த இந்த தொற்று விலங்குகளுக்கும் பரவியது.
பெரு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்தனர்.பெரு நாட்டில் ஜுனின் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஷெரிங் பாத் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பெரு அரசுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றி எரியும் எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பலை ஆழ்கடலுக்கு நகர்த்த மேற்கொள்ளப்பட்ட திட்டம் தற்போதைக்கு சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிதீவிர யாஸ் புயலானது கரையை கடந்து வருவதால் ஒடிசா, மேற்கு வங்காளத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இலங்கையின் நிலைமை தீவிரமடைந்து வருவதால் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமெரிக்க குடிமக்களை எச்சரித்துள்ளது.
கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புராண கதைகளை பரப்பியதால் மக்கள் புராணங்களை நோக்கிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியது.இந்த நிகழ்வுகள் பலவற்றில் மக்களை நம்ப வைக்க அதற்கு ஒரு மத பின்னணி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மத புராணங்களில் ஒரு பரவலும் இருந்தது.
இன்றிரவிலிருந்து தமது கடமைகளிலிருந்த விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.தற்போது நாட்டில் நடைபெறும் கொவிட் கட்டுப்படுத்தல் தடுப்பூசித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார கூறுகிறார்.
பசிஃபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள தொலைதூர தீவுகளில் ஒன்றான சமோவா நாட்டில் புதிய பெண் பிரதமராக தேர்வான ஃபியாமே நவோமி மட்டாட்டாஃபாவை பதவியேற்க விடாமல் தேர்தலில் தோல்வியடைந்தவரின் ஆதரவாளர்கள் விரட்டியடித்துள்ளனர்.
வங்காள விரிகுடா பகுதியில் வீசிய காற்று சூறாவளியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
2008-ம் ஆண்டில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு லாரிகள் அடிக்கடி மாயமாகின. அந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து 13 லாரிகள் மாயமானது. அவற்றின் டிரைவர்களும், கிளீனர்களும் என்ன ஆனார்கள் என்பது தெரியாமலும் மர்மம் நீடித்து வந்தது.இதுதொடர்பாக, பிரகாசம் மாவட்டத்திலுள்ள ஓங்கோல் காவல் நிலையத்தில் மட்டும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 7 நாட்களில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20000க்கும் மேல் நாட்டின் சகல மாவட்டங்களிலிருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 10000 பேர் கொழும்பு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.கொவிட் செயலணியின் உத்தியோக புள்ளிவிவரங்களின்படி மே மாதம் 17ம் திகதி காலை 7.00 மணியிலிருந்து 24ம் திகதி காலை 6.00 மணிவரை கண்டறிய்ப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 21455.