நேற்று (03) பாராளுமன்றத்திற்கு அருகாமையில் நடைபெற்று கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட தொழிலாளர் போராட்ட மத்தியநிலையத்தின் அரசியல் செயற்பாட்டாளர்களான சமீர கொஸ்வத்த மற்றும் கோஷிலா ஹன்ஸமாலி ஆகியோர் இம்மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடூழிய சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தனது நெருங்கிய உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார் என்று சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று (4) காலை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்து தடுப்பு காவலில் வைப்பதிருப்பது தொடர்பாக அரச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே நடந்த விவாதத்தால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க வாகன அணிவகுப்பு இப்போது ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்துள்ளது.

அரந்தலாவையில் பிக்குகளைக் கொல்லப்பட்ட விவகாரம் முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை  கைது செய்யுமாறு தேரர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவு முன்வைக்கப்பட்டுள்ளது.குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உரிய முடிவு மற்றும் திருத்தங்களை சமர்ப்பித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

நான் ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் மிகவும் பொறுப்புடன் எனது மக்களுக்கு நான் கூற நினைப்பது  இந்த வழக்கில் அங்கு நடந்த நிகழ்வுகளின் உண்மை தன்மை தொடர்பாக நீதிமன்றமேதீர்மானம் எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 25 வருடங்களுக்கு மேலாக கும்புறுமூலை இராணுவ முகாம் அமைந்திருந்த அரச மற்றும் தனியார் காணி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய போட்டியாளராக மாறியுள்ள, மெடில்டா கார்ல்ஸன், குதிரையோட்ட போட்டியில் தகுதிகாண் முதல் சுற்றில் நாளை போட்டியிடவுள்ளார்.

டிமனோவ்ஸ்கயாவுக்கு போலாந்து மனிதாபிமான விசா வழங்கியுள்ளது.கட்டாயப்படுத்தி தாய்நாட்டுக்கு அனுப்புவதாக புகார் கூறிய பெலாரூஸ் நாட்டைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனைக்கு போலாந்து அரசு, 'மனிதாபிமான விசா' வழங்கியிருக்கிறது.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி திருமதி த.செல்வராணி தலைமையில் திருக்கோவில் குடிநிலம் செல்வ விநாயகர் முன்றலில் இடம்பெற்றது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கேட்கின்ற சம்பளப் பிரச்சினைத் தீர்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அளவுக்கு அரசாங்கத்திடம் தற்சமயம் பணம் இல்லையென தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க குடியரசு கட்சி தெரிவித்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி