இறக்குமதி செய்யப்பட்ட உள்ளாடைகளை அணியாத காரணத்தினால் யாரும் மரணிக்கப் போவதில்லை என ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுவிடசலாந்தின் ஜெனீவா தலைமையகத்தில் இன்று (13) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 48வது கூட்டத் தொடரில் இலங்கை உட்பட சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கை முன்வைக்கப்படவிருக்கிறது.

தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன.

ஒன்றரை வருட காலமாக கல்வி சீரழிந்துள்ள நிலையில் எதுவுமே செய்யாத அரசாங்கம், பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சி செய்வது பிள்ளைகளின் நன்மைக்காக அல்ல, ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பு சம்பந்தமாக பெற்றோர் மத்தியில் வெறுப்பை வளர்ப்பதற்காகவே என ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் கூறுகின்றன.

இலங்கை மக்களை இரண்டுவேளை மட்டும் உணவு உண்ண அமைச்சர்கள் பரிந்துரைக்க இத்தாலியில் மகிந்த அன் கோ பங்கெடுத்த விருந்து சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இரத்தினபுரி – கெட்டந்தொல பகுதியில் கொள்கலன் லொறியொன்று 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

நிதி அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மீண்டும் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார்.

கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக ஒகஸ்ட் 3ம் திகதி நடைபெற்ற அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்ற குற்றத்திற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கோஷிலா ஹன்ஸமாலிக்கு கொரோனா தொற்றியிருப்பதால் அம்பேபுஸ்ஸ சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மத்திய சூடானில் ஏற்பட்ட போக்குவரத்து விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.மத்திய சூடான் நாட்டில் கெஜிரா பகுதியில் அல்-காம்லின் என்ற பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றும், சிற்றுந்து ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது.

இத்தாலி சென்றிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அங்கு வசிக்கும் இலங்கையர்கள் குழுவால் (bologna city) இன்று (12) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உலக அளவில் மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் வங்காளதேசத்தில் தொற்று வேகமாக பரவியது.

அரசாங்கத்தின் தலைவிதி மக்கள் நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொரோனா  தொற்றுநோயை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களுக்கு எதிராக சட்டபூர்வமாக போராடவும், பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிமுகப்படுத்தி ஒரு வருடம் கழித்து, தனியார் துறை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் புதிய திட்டங்களை முன்வைத்துள்ளது.

சதோச மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக ஆடைகளை விற்பனை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வர்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐவரி கோஸ்ட் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஐவரி கோஸ்ட்டின் மேற்கு பகுதியில் புர்கினா பாசோ நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள லோகோடோகோ நகரில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி