ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அமைய அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பாடசாலைகளை மீள திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவசரகால விதிமுறைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இன்று பணியாற்றுவது கோட்டாபய ராஜபக்சவா? நந்தசேன ராஜபக்சவா? என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அம்பாறையில் கை, கால்கள் கட்டப்பட்டு வீதியோராத்தில் கைவிடப்பட்ட நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 07ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி திருத்தச் சட்டமூலமானது கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் செயலாகுமென, நுகேகொட கட்சி அலுவலகத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறினார்.

மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அசாம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.அசாம் மாநிலம் ஜோராட் மாவட்டம் பிரம்மபுத்ரா ஆற்றில் நிமடி காட் என்ற படகு குழாமில் இருந்து நேற்று ‘மா கமலா’ என்ற எந்திர படகு புறப்பட தயாரானது. அதில் 120-க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

ரஷ்ய அவசர சூழ்நிலைகளுக்கான மந்திரி யெவ்ஜெனி ஜினிச்சேவ் (வயது 55), தண்ணீரில் தவறி விழுந்தவரை மீட்க போது மரணம் அடைந்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் பற்றிய விசாரணைகள் குறித்து புனித பாப்பரசரை சந்திக்க இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் எடுத்துவரும் முயற்சிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து மாலைதீவுக்கு மணல் கடத்தப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சுப் பதவியிலிருந்து தாம் இராஜினாமா செய்வதாக சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சவால் விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள சுற்றாடற்துறை அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இலங்கை அரசாங்கம் விவசாயத்திற்கான இரசாயன இறக்குமதிக்கு தடை விதித்ததால் இந்த வருடம் இறப்பர் உற்பத்தி குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலத்தில் நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடத்திற்குள் 107.5 கிலோமீட்டர் தூரத்துக்கு, யானை தடுப்பு வேலிகள் அமைத்து, யானைகள்  கிராமங்களுக்குள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி கைதிகள் உள்பட 41 பேர் பலியாகினர்.

அவசரகாலச் சட்டம் ஒன்று நாட்டில் எந்த தேவையும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி