ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சி என்ற வகையில் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மீதான பொலிஸாரின் இடையூறுகள் சம்பந்தமாக தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள சிறை ஒன்றில் இருந்து சுரங்கம் தோண்டி ஆறு பாலத்தீனர்கள் இரவோடு இரவாக தப்பியுள்ளனர். தப்பியோடிய ஆறு சிறைக் கைதிகளையும் இஸ்ரேலிய அதிகாரிகள் தற்பொழுது தேடிக் கொண்டிருக்கின்றனர்.

கொவிட் நோய் கட்டுப்பாடு குறித்த மருத்துவக் குழுவில், தேசிய தொற்று நோய்களுக்கான பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம உறுப்பினர் பதவியை விட்டு விலகினார்.

அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளுக்கு எதிரான ஏற்பாடுகளைக் கொண்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென முன்னணி கைதிகளின் உரிமைக்கான குழு கோரியுள்ளது.

தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிந்துவிட்டது, தலீபான்களுக்கு எதிராக ஆயுதம் எடுக்கும் எவரும் மக்களுக்கும் நாட்டிற்கும் எதிரி என தலீபான்கள் கூறி உள்ளனர்.

கடமையாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் சுகாதார ஊழியர்களின் ஊதியத்தை தொடர்ந்து அவர்களது குடும்பத்திற்கு வழங்குமாறு நாட்டின் முன்னணி சுகாதார பராமரிப்பு சேவை சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

காணாமல் போனவர்களைத் தேடும் இலங்கையின் முதன்மையான அமைப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தனிப்பட்ட தகவல்களைக் கோருவதால் அச்சமடைந்துள்ளனர்.

கந்தளாய் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு அருகில் நடைபாதை அமைக்கும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொத்தலாவல தனியார் பல்கலைக் கழக சட்டமூலத்திற்கு எதிராக இலவச கல்விக்கான மாணவர் – மக்களி இயக்கத்தினர் கடந்த ஒகஸ்ட் 3ம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகாமையில நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 5 எதிர்ப்பாளர்கள் விடயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீதி சம்பந்தமான அடிப்படை கொள்கைகளுக்கு ஏற்ப சட்ட ரீதியில் பாதுகாப்பு வழங்காமல் பலி வாங்கப்படுவதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறுகிறார்.

ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபன்களுக்கு எதிராகப் போராடிவரும் தேசிய எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அஹமத் மசூத், தாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருக்கிறார்.

புலிகள் அமைப்பின் அரசியல்த்துறையினரின் பிரதான மொழிபெயர்ப்பாளராக விளங்கிவந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் இன்று காலமாகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானது.இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அம்பாறை அட்டாளைச்சேனை ஷாஹிர் கான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளர் மீது அக்கரைப்பற்று பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கி, ஒளிப்பதிவு கமராவை உடைத்த  சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி