நாடு கடத்தப்பட்ட இரு இலங்கையர்கள் மீதான நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர்களுக்கு 10 மில்லியன் ஜென் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் டோக்கியோ உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐநா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் உரை நிகழ்த்தினார்.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருடன், கடந்த 19ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள், கடந்த சில தினங்களாக பேசுப் பொருளாகியிருந்தன.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் எலியந்த வைட் (Eliyantha White) உயிரிழந்துள்ளார்.

ஸியோமி செல்பேசிகளில் தணிக்கை வசதி இயல்பாகவே நிறுவப்பட்டுள்ளதாக லித்துவேனியா பாதுகாப்புத்துறை ஆய்வு கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கூட்டரேஷிற்கும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, இலங்கை தமிழர் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

புத்தளத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர், யுவதிகள் திடீரென மயங்கி விழுந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசிய பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது 80ஆவது வயதில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமாகியுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபையின் சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா, ஒரு மேலதிக வாக்கினால்  வெற்றிபெற்று, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தெரிவிசெய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தாலிபன்கள், ஐநா சபையில் பேச, ஐநாவிடமே முறையாக அனுமதி கேட்டு கடந்த திங்கட்கிழமை கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்கள்.

காலி மாவட்டத்தின், இமதுவ பிரதேசசபை அமர்வில், பொம்மை, வெற்று பால் புட்டி, மதுபான போத்தலுடன் பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்

தமிழ்நாட்டில் திருச்சி மத்திய சிறைச்சாலைக்குள் உள்ள அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 29 இலங்கைத் தமிழர்கள் கடந்த மாதம் பாரிய தற்கொலை முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகமான அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த இரண்டரை மாதங்களாக தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு ஆசிரியர்களை குற்றப்புலனாய்வு பிரிவு (சிஐடி) விசாரணைக்கு அழைத்தமை அரசாங்கத்தின் சூழ்ச்சி என  ஆசிரியர்கள் மற்றும்  அதிபர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்களின் போராட்டங்களுக்கு எந்த தடையும் ஏற்படுத்தப்படவில்லை என  ஜனாதிபதி அறிவித்த நிலையில், இலங்கையில் போராட்டங்களை நடத்த முடியாது எனக் கூறி கைது செய்யப்பட்ட இரண்டு சிறு வர்த்தகர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர் வருகையில் எதிர்க்கட்சிகளை தோற்கடித்து ஆளும் கட்சி முன்னிலைப் பெற்றுள்ளது.

கல்வி தனியார்மயத்திற்கும், ராணுவமயத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தமையால் சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பிணை கோரி ஹோமகம உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒக்டோபர் 5ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி