இலங்கையில் துன்பப்படும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவந்தமாக அடக்கப்படுவதையும், மக்கள் அடக்குமுறை செய்யப்படுவதையும் வன்மையாகக் கண்டிப்பதாக ஈரானின் Hekmatist கம்யூனிஸக் கட்சி அறிக்கையொன்றின் வாயிலாக கூறியுள்ளது.

சீனாவில் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் வகையிலும், தங்கள் நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும் சட்டங்களை முறையாக திருத்தி இருக்கிறது.

எதிர்காலத்தில் நாடு நீண்ட காலமாக மூடப்பட வேண்டுமானால், நாட்டில் உள்ள அனைவரும் அதிக தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முழு இலங்கை மக்களுக்கும் தெரிவிக்கிறார்.

இன்று (20) இரவு 10 மணி முதல் 30 ஆம்​ திகதி அதிகாலை 4 மணி வரை முழு நாட்டிற்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார்.

வைத்தியர்கள் அவரது தந்தைக்கு கொரோனா தொற்றுக்காக டொசிலிசுமா என்ற மருந்தை எடுத்துக்கொள்ளும்​படி அறிவுறுத்தினார்கள், ஆனால் மருந்தை வாங்க ரோஹான் ஜயசிங்கவால் முடியவில்லை. அதனால் அவரது தந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார்.அவரது தநதையும் ஒரு பிரபல மருத்துவராவார்.

இலங்கை பொலிஸாருக்கான பயிற்சியை முழுமையாக நிறுத்துமாறு, ஸ்கொட்ரலாந்திற்கு நீண்டகாலமாக அறிவுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இடைநிறுத்தப்பட்ட பயிற்சியின் விபரங்களை வெளியிடுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் குழு அழைப்பு விடுத்துள்ளது.

முதன் முறையாக, தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் இலங்கையில் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்மானம் மேற்கொள்ளும் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மண்ணில் உள்ள பல லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள உலோகங்களை வெட்டி எடுப்பதில் சீனா ஆர்வமாக உள்ளது.

சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளது.

மட்டக்களப்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த விதுசனின் உடலை உடல்கூற்று பரிசோதனைக்காக கொழுப்புக்கு மாற்றுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூன் மாதம் 3ம் திகதி சந்திரன் விதுசன் எனும் இளைஞன் ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 60இற்கும் மேற்பட்டோரும், பங்களாதேஷ், நைஜீரியா, சூடான், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 30 பேரும் உள்ளனர்.

நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை குறித்து, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் வடக்கு சமவெளிகள் உலகின் மிக செழிப்பான விவசாயப் பகுதிகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் இன்று பல கிராமங்களில் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் சண்டைகள் ஏற்படுகின்றன. இந்தியா மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு என்ன காரணம்? தட்டுப்பாட்டால் உருவாகும் பிரச்னைகள் என்னென்ன?

நாட்டை முழுமையாக முடக்குவதா? இல்லை தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை இன்னுமின்னும் இறுக்கமாக்குவதா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நாளை வௌ்ளிக்கிழமை எடுக்கப்படக்கூடுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொடிய கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொண்டு உற்பத்தி நிறுவனங்களை நடத்த சுகாதார அதிகாரிகள் பதிதாக வழிகாட்டல்களை வழங்கத் தவறிய காரணத்தினால் தொழிலாளர்கள் வைரஸின் புதிய திரிபுகளுக்கு இரையாகி வருவதாக தனியார் துறையின் முன்னணி தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி