ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலைக் கைப்பற்றியிருக்கும் தலிபான்கள் "வெற்றி பெற்றதாக" அறிவித்துள்ளனர். இதனால் அங்கு அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகளின் கட்டுப்பாடு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கையின் சிரேஸ்ட்ட இடதுசாரித் தலைவர்களில் ஒருவரை சிஐடிக்கு வருமாறு பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. இதற்கிடையே, ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானை விட்டு அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி சென்று விட்டதாக அங்குள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவருகின்றன.

நாட்டில் திடீரென ஆம்புலன்ஸ் வந்தது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வந்துள்ளன.முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் கட்டுநாயக்க வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள அனைவரும் கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாளை (16) முதல் தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றிலிருந்து உயிரை பாதுகாத்துக்கு கொள்வதற்காக, நாளை திங்கட்கிழமை முதல் சுய பயணக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின் நாளை பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக பிரதமர் விவகாரத்துறை அமைச்சர் முஹமட் ரிட்சுவான் முஹமட் யூசோப் (Mohd Redzuan Md Yusof) தெரிவித்துள்ளார். இதையடுத்து மலேசிய அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடக்கப் போவதாக தூதுவராலயத்திற்கு தகவலளித்த குற்றத்திற்காக முன்னாள் விமானப்படை அதிகாரியொருவர் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட நிபுணர்களின் பரிந்துரைகளை ஏற்று, அரசாங்கம் நாட்டை முழுமையாக முடக்க வேண்டுமெனவும் கஷ்டப்படும் மக்கள் விடயத்தில் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது அத்தியாவசியமாகுமெனவும் முன்னிலை சோஷலிஸக் கட்சி கூறுகிறது.

கொவிட் தொடர்பான புள்ளிவிவரங்களை மாற்றி ஜனாதிபதி மக்களின் உயிர்களுடன் விளையாடி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

திலித் ஜயவீரவிற்கு சொந்தமாக ‘லிபர்டி பப்லிஷர்ஸ்’ பத்திரிகை நிறுவனத்தின் தமிழ் பத்திரிகையான ‘தமிழன்’ பத்திரிகையின் ஆசிரியரான ஆர். சிவராஜ் அவர்களின் வீட்டிற்கு கடந்த 11ம் திகதி நள்ளிரவு குற்ற விசாரணைத் திணைக்களத்திலிருந்து எனக் கூறி சிலர் நுழைய முயன்றுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள புதிய விதிமுறைகளை கடுமையாக விமர்சித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அதனை மீளப் பெறுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரியுள்ளது.

11 பேரை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பிலான வழக்கில்  முன்னாள் கடற்படைத் தலைவரை விடுவிக்க சட்டமா அதிபர் கப்பம் பெற்றுள்ளதாக மனித உரிமை குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி