ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி மடகாஸ்கர் உலகின் முதல் "பருவநிலை மாற்றப் பஞ்சத்தை" எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளது. நான்கு ஆண்டுகளாக மழையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் மோசமான பசி பட்டினியாலும், உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மங்கள சமரவீரவை பலரும் விரும்பினர். ஆனால் ஒருசிலர் அவரை விரும்பவில்லை. அவரது தாராளவாத பார்வையில் உடன்படாத பலர் இருந்தனர் ஆனால் அவர்களை மிரட்டாமல் உரையாடலை ஏற்றுக்கொண்டனர். அவர் தனது உலகக்கண்ணோட்டத்தை ஆணையிட பிரபலமான கோரிக்கைகளைஅனுமதித்தவர்அல்ல. மாறாக, சமூக விதிமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை அவர் கேள்விஎழுப்பினார்.

சுகாதார அமைச்சின் செயலாளரின் உத்தரவுகளை நிறைவேற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார சேவையின் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் புதிய சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முடக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு செயலாளர் உட்பட ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகள் குழு, துருக்கியில் இடம்பெறும் ஆயுத விற்பனைக்கான கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.

இலங்கையில் அரச நிறுவனங்களுக்கு சொந்தமாக 82,000ற்கும் மேற்பட்ட வாகனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
பொருளாதார கொள்கை மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக, பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அரச வணிக நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் 82,194 வாகனங்கள் இருப்பதாக அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் அரசியல்வாதிகளை வணங்கக்கூடாது என்று நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

களுபோவில வைத்தியசாலையின் வார்டுகளில் கொவிட் வைரஸால் இற்தவர்களின் உடல்களைக் காட்டும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஒருவர் 23ம் திகதி பொலிஸ் துறையின் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவையென பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த இருண்ட காலத்தில் நீங்கள் வாழ்க்கைப் போரில் தோற்றீர்கள்.உங்களை வாழ வைக்க உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்காக சண்டையிட்டனர். கண்ணீர் வந்தது. அந்த நம்பிக்கையையும் இழந்தோம்.

சில தினங்களுக்கு முன்னர் மத்துகம பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் திடீரென இறந்தமைக்குக் காரணம் அவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டமைதான் என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இளம் பாடகி யொஹானி டி சில்வா தற்போது பிரபலத்தின் உச்சியில் உள்ளார்.அவரது அட்டைப் பாடல் "மெனிகே மகே ஹித்தே" யூடியூபில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

மங்கள சமரவீர வார்த்தையின் முழு அர்த்தத்தில் இலங்கை அரசியலுக்கு ஒரு பட்டாம்பூச்சி.இலங்கை அரசியலில் மந்திரம் இல்லை. இரண்டு குழுக்கள் அரசியல் அதிகாரத்தை மாறி,மாறி கைப்பற்றுகின்றன. அது பற்றி வருத்தம் இருந்தால், குறிப்பாக கோபம் இருந்தால், ஜேவிபி அந்த இடை வௌியை நிரப்ப வேண்டும் அவ்வளவு தான்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளன. மேலும், ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தலீபான்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

இலங்கை அரசியலில் ஒரு புரட்சிகரமான நபர் கிங் மேக்கர் என்று அறியப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான மங்கள சமரவீர இன்று (ஆகஸ்ட் 24) கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அரச வாகனங்களில், சீருடையுடன் தமது பிரதேசத்திற்கு வெளியே சென்று, பீடாதிபதிகளை சந்தித்து, ஊடகங்களின் முன்னிலையில் மிகவும் ஒழுக்கேடான முறையில் கருத்துகளை வெளிப்படுத்திய உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக காவல்துறை ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டுமென, முன்னாள் அரச மற்றும் காவல்துறை அதிகாரிகள் குழு, பரிந்துரைத்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி