கெரவலபிட்டிய, யுகதனவி மின் நிலையத்திற்குரிய 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தை நிறுத்த உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எல்லே குணவன்ச தேரர் மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனது மகனை திட்டமிட்டு கொலை செய்து விட்டு எங்களை தற்போது அலைய விடுகின்றனர் என,  இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின்(Viyalendran) வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் தாயார் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியான செய்தி குறித்து ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) கூறுகையில்,அந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளதாக அக்கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தஹாம் சிறிசேன, பொலன்னறுவை தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இளைஞர் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தஹாம் சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனாவார்.

தமிழ்நாடு அதிரடிப்படையால் `சந்தனக் கடத்தல்' வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. ` காடுகள் மற்றும் அவற்றையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகக் கொண்டு செல்லப்படாததால்தான் வீரப்பன் என்ற நபர் உருவானார். தற்போதும் அதே சூழலில்தான் பழங்குடிகள் வசிக்கின்றனர்' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியம். என்ன நடக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில்?

கடந்த ஒகஸ்ட் 3ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமையால் எவ்வித குற்றச்சாட்டுமின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கோஷிலா ஹன்சமாலிக்கு சிறைச்சாலையில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென தமிழக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் இலங்கையின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பைச்  சந்தித்துள்ளது.

ஹைதி நாட்டில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுஜீகரன் நிசாந்தனை விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைத்துள்ளது.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பறங்கியாமடு புகையிரத பாதையில் பாதுகாப்பு கடவை அமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தமது வழமையான வீதி போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையை கண்டித்தும் போக்குவரத்திற்கு விடுமாறு கோரி பிரதேச மக்களினால் இன்று (ஞாயிறு 17) கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தடையில்லா எரிபொருள் விநியோகத்துக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்க முடியும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udhaya Gammanbila) எச்சரித்துள்ளார்.

கந்தளாய் - தம்பலகாமம் மற்றும் கிண்ணியா பிரதேச விவசாயிகள் தங்களின் விவசாய செயற்பாடுகளுக்காக அரசாங்கம் விரைவில் இரசாயன உரத்தினை பெற்றுத்தறுமாறு கோரி இன்று (17) ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழை, வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அங்கு குறைந்தபட்சம் 12 பேரைக் காணவில்லை என்று தெரிய வருகிறது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி