யாழ்ப்பாணம் – புத்தூர், நவகிரியில் நிலாவரைக் கிணறு அமைந்துள்ள பகுதியில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக மரணிப்போரை தகனம் செய்ய மாத்திரம் அனுமதிக்கும் வர்த்தமானியை மாற்றுமாறு அரசாங்கத்தை கோருவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .

இலங்கையில் நடைபெற்ற போரிலிருந்து தப்பித்து தமிழகம் சென்ற அகதியொருவர் கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கடற்படையினர் கடந்த திங்கட்கிழமை இரவு தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில் அந்தப் படகு மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்த நால்வரும் படுகொலை செய்யப்பட்னர். அதில் நீண்ட காலமாக மண்டபம் பகுதியிலுள்ள அகதிகள் முகாமிலிருந்த சாம் நேசபெருமாளும் அடங்குவார்.

சீஷெல்ஸ் உயர்ஸ்தானிகராக குடும்ப உறுப்பினர் நியமிக்கப்பட்டது மற்றொரு கறுப்புப் பண வியாபாரத்திற்காகவா!

அ.தி.மு.க-வில் இப்போது மூணு சீட்டு விவகாரம் மிகப் பிரபலம்! அமைச்சர்கள் பலரும் கோயில் கோயிலாகச் சென்று சுவாமி முன்பாக மூன்று சீட்டுகளைக் குலுக்கிப் போட்டு எடுத்து வருகிறார்களாம். சனிப்பெயர்ச்சிக்கே ஜோதிடம், பரிகாரம் என்று ரணகளப்படுத்திவிடுபவர்கள், ‘சசிப்பெயர்ச்சி’க்கு சும்மா இருப்பார்களா? சசிகலா, எடப்பாடி, பன்னீர் ஆகியோரின் பெயர்களை எழுதிப் போட்டு யார் பக்கம் செல்வது என்று குறி கேட்டுவருகிறார்கள்! இன்னொரு பக்கம்… சசிகலாவின் நிபந்தனைகள், தினகரனின் சீக்ரெட் விசிட், முதல்வர் பழனிசாமியின் டெல்லி பயணம் ஆகியவற்றை மையப்படுத்தி அரசியல் சதுரங்கத்தில் வேக வேகமாக நகர்த்தப்படுகின்றன காய்கள்.

விசேட தேவையுடைய ஒரு குழு சார்பாக ஒரு தசாப்தத்திற்கு முன்னர் முதலாவது ராஜபக்ச ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த இரண்டாவது ராஜபக்ச ஆட்சி தீர்மானித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், உலகின் பார்வையில் விமர்சிக்கப்பட்ட ஒரு கொள்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது.

11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகளை நேரில் கண்ட சாட்சிகளை சித்திரவதை செய்வதாகவும், அவர்களை சிறைக்குள் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்துள்ளதாகவும் சிறை நிர்வாகம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த கைதிகளை விடுவிப்பதைத் தடுப்பதன் மூலம் மஹர படுகொலைக்கான சாட்சிகளை மறைக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மங்கள எதற்கு வர நினைக்கிறார்! கோதபாயவுக்கு ஜக் அடிக்கவா? ரணிலை மீண்டும் முன்னணியில் கொண்டு வரவா?

கொரோனா தடுப்பு மருந்து எனக்கூறி நாட்டு மருத்துவர் ஒருவர் வழங்கிய 'பாணி' ஒன்றை அருந்திய இலங்கை ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில்  பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அப் பகுதியில் பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விடயத்தில், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள முடியாது என, துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றத்தை வழங்மாறு கோரி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் ஆரி முதல் இடத்தையும், பாலாஜி முதல் ரன்னர்அப்பாகவும், ரியோ, ரம்யா, சோம் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளனர். இந்த ஐவரில் சோம் சற்று நேரத்துக்கு முன்னர் எவிக்ட்டாகி வெளியே வந்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி