அ.தி.மு.க-வில் இப்போது மூணு சீட்டு விவகாரம் மிகப் பிரபலம்! அமைச்சர்கள் பலரும் கோயில் கோயிலாகச் சென்று சுவாமி முன்பாக மூன்று சீட்டுகளைக் குலுக்கிப் போட்டு எடுத்து வருகிறார்களாம். சனிப்பெயர்ச்சிக்கே ஜோதிடம், பரிகாரம் என்று ரணகளப்படுத்திவிடுபவர்கள், ‘சசிப்பெயர்ச்சி’க்கு சும்மா இருப்பார்களா? சசிகலா, எடப்பாடி, பன்னீர் ஆகியோரின் பெயர்களை எழுதிப் போட்டு யார் பக்கம் செல்வது என்று குறி கேட்டுவருகிறார்கள்! இன்னொரு பக்கம்… சசிகலாவின் நிபந்தனைகள், தினகரனின் சீக்ரெட் விசிட், முதல்வர் பழனிசாமியின் டெல்லி பயணம் ஆகியவற்றை மையப்படுத்தி அரசியல் சதுரங்கத்தில் வேக வேகமாக நகர்த்தப்படுகின்றன காய்கள்.