தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் 2010இற்கு பின்பு குடியேறிய மக்களுக்காக 10148 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்காக கிட்டத்தட்ட 6000 ஏக்கர் காடுகளை துப்பரவாக்கும் செயற்பாடு சிவில் ஓயா திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுகிறது. சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்குவதற்கு காடுகள் அழிக்கப்படுகின்றன.

எனவே பிரதமரே இது தொடர்பில் நீங்கள் கவனம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்த பிரதமரை நோக்கி சார்ள்ஸ் நிர்மலநாதன் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி