ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துறைமுகத்திற்கு வந்திருந்த வணிகக் கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் போது இந்த கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற, வெலிகடை படுகொலையின் முக்கிய நேரடி சாட்சியாளருக்கு மீண்டும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

பொத்துவில் அறுகம்பையிலிருந்து கடந்த மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை மீன் பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த மீனவர்கள், 20 நாட்களின் பின்னர் கரைசேர்ந்துள்ளனர்.

வவுனியா தாண்டிக்குளம் சாந்தசோலை பிரதான ஏ 9 வீதியில் இன்று சௌபாக்கியா கிராம நிகழ்ச்சித்திடம் மேற்கொள்வதற்கு அநுராதபுரத்திலிருந்து சென்ற புகையிரதத்திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலரினால் இடையூறு ஏற்படுத்துவதாக கிடைத்த தகவலை சேகரிப்பதற்குச் சென்ற ஊடகவியலாளருக்கு அங்கு சிவில் உடை தரித்து நின்ற பொலிஸ் அதிகாரியினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கவின் புளோரிடா மாகாணத்தில் இந்த ஆண்டு அதிகளவிலான கடற்பசுக்கள் பட்டினியால் இறந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முத்துராஜவெல சதுப்பு நிலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் பாரிய கட்டட நிர்மாண நடவடிக்கைகள் மற்றும் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை எதிர்வரும் 26 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் (12) தீர்மானித்துள்ளது.

ஜூலை மாதம் 7ம் திகதி பொறியியல் கூட்டத்தாபன ஊழியர்களின் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் போராட்ட நிலையத்தின ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்தி பொலிஸாரால் கடத்தப்பட்டனர்.

வன்முறையில் இறங்காமல் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்களைப் பொலிஸாரைக் கொண்டு காடைத்தனமான முறையில் அடக்குவது அரசின் சர்வாதிகாரப்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அரசின் இந்த அராஜகம் தொடர்ந்தால் பெரும் பின்விளைவுகளை அது விரைவில் சந்தித்தே தீரும் என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கு இல்லை என்று  நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியு பின்னர் பாடசாலைகளைத் திறப்பதற்கு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள றோயல் நோர்வே தூதரகம் இதுவரை காலமும் இயங்கிய புல்லர்ஸ் ஒழுங்கை, கொழும்பு 7 எனும் முகவரியிலிருந்து, கொழும்பு 2 இல் அமைந்துள்ள அலுவலகத் தொகுதிக்கு இடம் மாறியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் பல்வேறு ஆயுதக்குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த ஆயுதக் குழுக்களை சேர்ந்தவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்றுவிட்டு வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை அடிப்பது மற்றும் கால்நடைகளை திருடிச் செல்வது போன்ற நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் வசமிருக்கும் அமைச்சுகளில் சிலவற்றை அவ்விருவரிடமிருந்தும் அபகரிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.

பொது மக்கள் மீது அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்படும் அடக்கு முறைகள் தொடர்ந்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிபோகும் நிலை ஏற்படும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை கடற்கரையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (09) கடற்றொழிலுக்காகச் சென்ற இரு மீனவர்கள் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி