சீனாவில் ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத மழைக்கு 51 பேர் பலியாகி உள்ளனர்.சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன.  இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது.

சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பத்தை தமிழ் மொழியில் நிரப்புவதற்கான உரிமையை இலங்கையர்கள் இழந்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்ததைப் போன்றே கடந்த 10 தசாப்தங்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களின் தவறான கொள்கை காரணமாக தற்போது இலங்கையில் உக்கிரமடைந்து வரும் கடுமையான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடி சம்பந்தமாக தீர்வு காண்பதற்கான வழிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறு கேட்டு மக்கள் விடுதலை முன்னணி, உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு முன்னிலை சோஷலிஸக் கட்சி கடித மூலம் அறிவித்துள்ளது.

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறும் பட்சத்தில், பொது மக்களுடன் இணைந்து பௌத்த தேரர்களும் வீதிக்கு இறங்கும் காலம் வெகு தொலைவில் இல்லையென பௌத்த தேரர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, 'உண்மையான தேசபக்தர்' என்ற கருத்தியல் அரசியல் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துப்பொருட்கள் தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நேற்று மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.மராட்டிய மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டுகிறது. இதனால், மும்பை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக ராய்காட் மாவட்டத்தில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. தொடர் மழையால், ராய்காட் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நேற்று  நிலச்சரிவு ஏற்பட்டது.

லாஃப் கேஸ் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் லிட்ரோ கேஸிற்கு பற்றாக்குறை இருப்பதாகவும் எரிவாயு விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் மீன் வளம் அழிவடைதற்கு  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த வெளியேறிய இரசாயன கசிவு காரணமல்ல எனவும், மாறாக நாடு முழுவதும் உள்ள கடலுக்கு அரசாங்கத்தால் திருப்பி விடப்பட்ட கழிவுநீர் அமைப்பே காரணமாக அமைந்துள்ளதாகவும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பழகிப்பார், பாதிப்பேர் மிருக ஜாதிதான்,சந்தர்ப்பவாதிகளின் சுயநலங்களை அறிந்து கொள்வதற்கு, மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் நல்லதொரு சந்தர்ப்பத்தை தந்துள்ளன. சிக்கலில் மாட்டிக் கொண்ட சக நண்பர்களை மேலும் சிக்கலில் மாட்டி, அரசியல் குளிர்காய நினைக்கும்  மனநிலையில் செயல்படும் இவர்களது நடவடிக்கைகளால் பலர் கவலையடைந்துள்ளனர்.

இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் தம்மால் உடன்பட முடியாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜாபருடனான உறவை துண்டித்து கொண்டதால் ஜாபர் என்பவர் நூரை கொலை செய்து உள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் தூதர் சவுகத் அலி முகதாமின் மகள் நூர் முகாதம் (27) செவ்வாய்க்கிழமை இரவு இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சவுகத் அலி முகாதம்  தென் கொரியாவில் பாகிஸ்தானின் தூதராக இருந்துள்ளார். கஜகஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

நாட்டை விற்கவோ அல்லது இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ தான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.நெடுந்தீவிலிருந்து வடதாரகை படகில் பயணம்செய்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த ஜூட் குமார் இஷாலினி என்ற இளம் தோட்டப் பெண்ணின் மரணம் அரசியல் அரங்கில் பரபரப்பான விஷயமாகிவிட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி