சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அண்மையில் நோர்வே நாடாளுமன்றிற்கு தெரிவான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கம்சீ குணரட்னம் (Kamzy Gunaratnam) தெரிவித்துள்ளார்.

நாட்டின் அடுத்த அரசாங்கத்தையும் அதை வழிநடத்தும் பிரதமரையும் தீர்மானிக்க ஜேர்மனி முழுவதும் உள்ள வாக்காளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் வாக்களித்தனர்.

பெருந்தோட்ட காணிகளில் பாற் பண்ணைகளை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஒரு தொழிற்சங்கமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாதென ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளேன்  என இ.தொ.காவின் உபத் தலைவர்   செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இன்று (27) பிற்பகல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை திருத்தம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.

மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது நடாத்துமாறு கோரியுள்ளார்.

குலாப் புயல், இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள கலிங்கபட்டினத்துக்கும் ஒடிஷாவின் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இது மேலும் சில மணி நேரம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று சனிக்கிழமை இரவு இனம் தெரியாத குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டனர்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அமைச்சரிடமிருந்து இன்று (25) கிட்டத்தட்ட 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

2022 க்கான வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் வரிக்கொள்கையில் விரிவான மாற்றங்கள் கொண்டுவரப்படவிருப்பதாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அரசாங்கத் தரப்பு பா.உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

மீன்பிடித் திணைக்கள பிராந்திய உதவிப்பணிப்பாளரின் செயலை கண்டித்தும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலையிட்டு தீர்வை பெற்றுத்தருமாறு கோரியும் அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் படகுகளில் ஏறி வித்தியாசமான போராட்டம் ஒன்றை அட்டாளைச்சேனை கடற்கரையில் நேற்று (24) மாலை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு வங்காள விரிகுடாவில் வட அகலாங்கு 18.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 90.4E இற்கும் இடையில் ஒரு தாழமுக்கம் மையம் கொண்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள  முன்னாள் ஆளுனர் அசாத் சாலி விவகாரத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் திரிபு படுத்தப்பட்ட ஆதாரங்களை வைத்துக் கொண்டு தவறாக செயற்பட்டிருப்பதாக கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் புத்திக சி. ராகல காட்டம் வெளியிட்டுள்ளர் .

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெற இருப்பதாக கூறி, அந்நிகழ்விற்கு தடை உத்தரவை பிறப்பிக்குமாறு மன்னார் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

தேசிய ரூபவாஹினியானது ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வளர்க்கும் விதமாக செயற்படுவதற்குப் பதிலாக, துவேசத்தையும், வெறுப்பையும் வளர்க்கக் கூடிய கருத்துக்களை ஒலிபரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி