ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் விகிதாசார முறையில் நடக்கும் என்ற உடன்பாடு ஒரு தற்காலிக ஏற்பாடாகும், இப்போது பழைய முறையில் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்ற உடன்பாடு அரசு - எதிரணி மத்தியில் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு செவிமடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை இந்த வாரத்தில் மீண்டும் முடங்கியதால் பேஸ்புக் நிர்வாகம் பயனர்களிடம் மன்னிப்புக் கோரியது.

ஆசிரியர்-அதிபர் போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கும் இரண்டாவது ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்ற எச்சரிக்கையின் நேர்மை கேள்விக்குறியாகியுள்ளது.

உயர்கல்வியின் இராணுவமயமாக்கலுக்கு எதிராக போராடியமைக்காக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட இலங்கையின் கல்வி உரிமை ஆர்வலர்களுக்கு சர்வதேச ஆதரவு அதிகரித்து வருகிறது.

சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நிலுவையில் இருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்தி முடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச (Basil Rajapaksa) இன்று நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கணினி கொள்வனவின்போது மதிப்பிடப்பட்ட தொகையைவிட 90 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்யப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழு கண்டறிந்துள்ளது.

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி பிறந்தவர் பிறைசூடன். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்னும் பாடலை எழுதியதன் மூலமாக தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக தனது பயணத்தை தொடங்கினார்.

அணி அணியாக பிளவுபடும் தருவாயில் இருக்கும் கட்சியிலிருந்து தன்னை நீக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பது நகைப்புக்குரியது என தயா கமகே தெரிவித்துள்ளார்.

கொடிய தொற்று நோயிலிருந்து நாட்டு மக்களை மீட்பதில் உறுதியாக உள்ள சுகாதார ஊழியர்களின் தேவைகளை விவாதிக்க கூட அதிகாரிகள் அவகாசம் அளிக்காத நிலையில், சுகாதார அமைச்சர் போராட்டங்களை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளர்.

ஆப்பிரிக்காவில் 500 மில்லியன் டொலர் முதலீட்டில் கொரோனா தடுப்பூசி தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது உலகம் முழுவதும் புகழ்பெற்ற இலங்கைப் பாடலான மெனிக்கே மகே ஹித்தே என்ற பாடல் நாட்டின் நாடாளுமனற்றத்தில் ஒலிக்க செய்த நிகழ்வு நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி