நேற்று (08) மேலும் 185 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனவரிக்குள், நாட்டின் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு 140 மில்லியன் டொலர் மீதமாக இருக்கும் என சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கவிதை எழுதியதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கவிஞருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என தெரிவிக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு 18 மாதங்களுக்கு மேலாகியுள்ளது.

இந்திய பாதுகாப்பு படைகளின் மூத்த அதிகாரியான முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் புதன்கிழமை அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்திய முப்படைகளின் தளபதியும் முன்னாள் ராணுவ தளபதியுமான பிபின் ராவத் சென்ற விமானப்படை விமானம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று காலை விழுந்து நொறுங்கியுள்ளது.

எரிவாயு கொள்கலன் வெடிப்பு , எரிவாயு கலவையில் மாற்றம் உட்பட எரிவாயு மோசடிகள் அரசாங்கத்தின் இயலாமையின் பிரதிபலன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் இலங்கைக்கான தூதுவருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது.

இறக்காமம் பிரதேசத்தை அம்பாறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையிலிருந்து விடுவித்து, அக்கரைப்பற்று நியாயாதிக்க எல்லைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.

இலங்கையின் முதன்மையான இராணுவப் பல்கலைக்கழகத்தில் பாலின சமூகத்தைப் பற்றி சமூகத்தை அறிவூட்டுவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தப்படாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வட்டி செலுத்த முடியாமல் 200ற்கும் மேற்பட்ட இலங்கை பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சசிகலா நலம் விசாரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த   வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று (07) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83 ஆகும்.

யாழில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மைய எரிவாயு அடுப்பு வெடிப்புகள் மற்றும் எரிவாயு தொடர்பான பிற விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு ஏற்கனவே அறிக்கையை வழங்கியுள்ளது.

புதுப்புது உருவெடுத்து கொரோனா வைரஸ் உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு தடைபோடும், கட்டுப்படுத்தும் வழிகள் குறித்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி