எரிவாயு வெடிப்பினால் ஏற்பட்ட சேதங்களுக்கு லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக அடுத்த சில நாட்களில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அனுமதி என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு மீண்டும் ஒரு முறை செல்லும் நோக்கம் தனக்கு இல்லை எனவும் சட்டத்துறை தொழிலுக்கு தான் மீண்டும் திரும்ப உள்ளதாகவும் நீதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

முடிந்ததால் 13வது திருத்தத்தினை அமுல்படுத்திக்காட்டுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அரசாங்கத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை (12) அகற்றப்பட்டுள்ளது.

உலகில் சதுப்பு நிலங்கள் தொடர்ந்து அழிந்துவரும் காரணத்தால் தும்பிகள் மறைந்து வருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மூன்று மாத நினைவஞ்சலியை முன்னிட்டு வெளியிடப்பட்ட 'மங்கள பதிப்பகத்தின்' USAID நிர்வாகி சமந்தா பவரின் சிறப்பு உரை மொழிபெயர்ப்பு

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அரச சார்பு செயற்பாட்டாளர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

“கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 40 முதல் 45 தமிழ் இளைஞர்கள் புலிகளை உயிர்த்தெழுப்பியதாகக் கூறி பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் போன்றவை அரசாங்கத்தை சார்ந்தவர்கள் பெற்று அனுபவிக்கிறார்கள் போல தெரிகிறது. வேறு ஆட்களுடைய கைகளிலும் இருக்கக் கூடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்(M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.

பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது அரசாங்கத்தில் உள்ள சிறிய கட்சிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணம்.  இந்த மாகாணத்தில் சுழல் காற்று தாக்கியதில் 50 பேர் உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன.  சுமார்  200 மைல் தூரத்திற்கு சூறாவளி போல சுழன்று அடித்த காற்று கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டதாக கென்டக்கி மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.உயிரிழப்பு எண்ணிக்கை 100- வரை கூட இருக்கலாம் எனவும் அவர் அச்சம் தெரிவித்தார்.

வடக்கில் பல்வேறான கடற்கரையோரங்களில் சடலங்கள் கரையொதுங்குகின்றன. இந்த சடலங்கள் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளனவென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இராணுவத்திடம் சரணடைந்தவர்களா? இவ்வாறு சடலங்களாக கரையொதுங்குகின்றனர் என்றும் கேள்வியெழுப்பினார்.

அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக பயன்படுத்திய மூலோபாய செயற்பாடுகள் தற்போது அரசாங்கத்திற்கே வினையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி