அநுராதபுரம் மாவட்டத்தின் திரப்பனை, இங்கினியாகம கிராம மக்கள் தண்ணீர், மின்சாரம், மலசலகூடம் போன்ற அடிப்படைத் தேவைகள் இன்றி தவித்து வருகின்றனர்.

துணிவிருந்தால் போர்க் குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்கு சர்வதேச நீதிமன்றத்துக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சவால் விடுத்தார்.

கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபினால் உலக அளவில் ஏற்பட சாத்தியமுள்ள இடர்ப்பாடு 'மிக அதிகம்' என்றும், இதனால், சில பகுதிகளில் தீவிர விளைவுகள் ஏற்படலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் – மண்டைதீவு முனைக்கடற்பரப்பில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாக இரண்டு மீன்பிடிப் படகுகள் மூழ்கியுள்ளதாகவும், தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜப்பான், நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

திருகோணமலை, மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 4ஆம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்களுடைய சொந்தக் காணிகளை தமக்கு மீட்டுத் தருமாறு கோரி, திருகோணமலை மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் இன்று (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் - மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி பிரதேச மக்களால் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளார்.

சிலிண்டர் வலுவாக இருந்தாலும் வாயு கலவை மாறினால் வாயு வெளியேறலாம் என இயற்கை எரிவாயு மற்றும் பெற்றோலிய ஆய்வு பொறியாளர் நிமல் டி சில்வா கூறுகிறார்.

மட்டக்களப்பு- கிரான்குளத்தின் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை)  முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் 'விபசாரம்' என்று அழைக்கப்படும் பாலியல் தொழிலை சட்டமாக்குவது தொடர்பான விவாதம் பரவலாக எழுந்திருக்கிறது.

ஒருகாலத்தில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பார்படோஸ் நாடு, தற்போது பிரிட்டன் அரசியின் தலைமையைத் நீக்கிவிட்டு, குடியரசு நாடாக மாற இருக்கிறது. இதன்மூலம் கடந்த 400 ஆண்டுகளாக பிரிட்டனோடு இருக்கும் உடன்பாடு முடிவுக்கு வருகிறது.

"அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்கும் நோக்கில் மலையக அரசியல் அரங்கம்” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பனவற்றின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று காந்திப் பூங்காவில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபி முன்றலில் இடம்பெற்றது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி