ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடென் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு போதுமான மாநிலங்களை வெல்லும் நிலையில் இருப்பதாக தெரிகிறது. மிச்சிகன் மற்றும் விஸ்கான்சினில் அவர் வென்றதாக செய்தி ஊடகங்கள் பகலில் அறிவித்தன.

பசில்ராஜபக்சவை நாடாளுமன்றத்தில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (09) பின்னர் மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்தும் அமுல்படுத்த எண்ணம் இல்லை என, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி முடிந்துள்ள நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

வைரஸ் ஒழிப்பிற்கான தீர்வை கண்டறியும் வரை நாட்டை முடக்கிவைக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், இரு வேட்பாளர்களுக்கான பிரசார குழுவும் தாங்கள் வெற்றி பெறுவதற்கான போதுமான முயற்சியை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சை  கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டுமென, நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அமெரிக்காவில் நடந்து வரும் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் நேரடியாக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 23 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (02) அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மொட்டுக்கு 4 வயதாகும்போது, ​​பசில் ராஜபக்ஷ வெளியில் இருந்து ஒரு அரசாங்கத்தை அமைத்தார்.நாடாளுமன்றம் செல்கிறீர்களா என்று யாராவது என்னிடம் கேட்டால், எனது தனிப்பட்ட பதில் இல்லை, இப்போது உள்ளே செல்ல வேண்டியதில்லை, ஏனென்றால் வெளியில் எங்கள் பணி இன்னும் முடிவடையவில்லை.

கொரோனா தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதா? எரிப்பதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியிடம் இன்று (03)  கேள்வி எழுப்பிய போது நாடாளுமன்றத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

நேற்று முன்தினம் (31) பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 27 வயதுடைய நபரின் மரணத்தை கொரோனா மரணமாக கருத்திற் கொள்ளாமல் இருக்க தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தீர்மானித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து பணியாற்றி உயிரிழந்த ஒருவரின் உறவினர் ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக   முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த குற்றச்சாட்டினை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மறுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி