பெரும்பான்மை சிங்கள பௌத்த வாக்குகளால் ஜனாபதியானவர் கோட்டபாய ராஜபக்ஷ ஆனால் அவர் மீண்டும் சிங்கள பௌத்த வாக்குகளால் ஜனாதிபதியாக முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து, மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில், சம்மாந்துறை நகரில் இன்று (28) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மியன்மாரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடந்துவரும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஒரு பகுதியாக, சனியன்று குறைந்தது 18 பேர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது.

அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை என்றும், தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என்று பிரதமர் மோடி, தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவும், கிழக்கு மாகாணசபை வேட்பாளராக இரா.சாணக்கியனும் களமிறக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆலோசனை  தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை சிறீலங்கா சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃப்.பி) கடுமையாக மறுத்துள்ளது, கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாடு முழுவதும் அமைதி வழியில் பிரச்சாரத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் சபை தீர்மானித்துள்ளது.

பிரித்தானியாவில் சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அம்பிகை உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு- வாகரை பிரதேசத்தின் கதிரவெளி கட்டுமுறிவுக்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் அதிகாலை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

மிகவும் குறுகிய காலத்தில் மக்களின் வெறுப்புக்கு உள்ளான ஒரே ஒரு அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளதென சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவான பௌத்த பிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க கோரி, அனுமதி மறுக்கப்பட்டு பலாத்காரமாக எரிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கல்முனை மக்கள் வங்கிக்கிளையில் பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஜந்து ஊழியர்களுக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு  செயற்படுவதற்கு தேவையான ஒரு கட்டமைப்பை உருவாக்குவோம் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி,  வடக்கில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி