நைஜீரியாவின் வடமேற்கே துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் 34 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.நைஜீரியாவின் வடமேற்கே கடுனா பகுதியில் கவுரா நகரில் மடமய் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இந்த சம்பவத்தில் 34 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  7 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த தாக்குதலின்போது, சில வீடுகளுக்கும் அந்த கும்பல் தீ வைத்து எரித்து உள்ளது.  இதுபற்றி அறிந்த அரசு படை சம்பவ பகுதிக்கு சென்று பதில் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.

இதன்பின்னர் எரிந்து கொண்டிருந்த 3 வீடுகளின் தீயை அணைத்தனர்.  6 பேரையும் மீட்டனர்.  இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்தும்படி அரசு உத்தரவிட்டது.

2 பேரை பிடித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இதில் பலர் கொல்லப்பட்டும் மற்றும் கடத்தப்பட்டும் உள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி