தாங்க முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்து வருவதால்,போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.</p

பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்வடைவதால், நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகள் உட்பட 30 அமைப்புகள் பொது கூட்டணியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இயங்க இணக்கம் தெரிவித்துள்ளன.

பல தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தத்தை சந்தித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாடு அமைதிக்கு திரும்பிய பின்னர் ஸஹ்ரான் எனும் கொடியவனின் மிலேச்சதத்தனமான தாக்குதலினால் பல பாதிப்புக்கள் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் பாதுகாப்புக்கு சம்பந்தமில்லாத சில சட்டங்களை பாதுகாப்புக்கு தொடர்பில்லாமல் நூற்றாண்டு காலமாக சில சமூகங்கள் பின்பற்றிவரும் தனியார் சட்டங்களை மாற்றவேண்டும் அல்லது இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி செயலணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று (10) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தேசிய விஞ்ஞான தினம் மற்றும் தேசிய விஞ்ஞான வாரம் தொடர்பான தனது ஆரம்ப உரையில் அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பளத்தை (சம்பள முரண்பாட்டின் 1/3 பங்கு) ஒரேயடியாக வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக ஆசிரியர் சங்கப் போராட்டத்தின் முன்னோடிகளான மஹிந்த ஜயசிங்கவும் ஜோசப் ஸ்டாலினும் தெரிவிக்கின்றனர்.

உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு இலங்கையில் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தை நினைவு கூறும் வகையில் நேற்று (10) அலரிமாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேனும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உண்மையான தேசப்பற்றாளரான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மூன்று மாதங்களுக்கு முன்னர் காலமானார்.

முத்துராஜவெல சுற்றாடல் உணர்திறன் வலயத்தில் உள்ள காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்டவிரோதமாக சுவீகரித்தமையால் அப்பகுதி மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி மீனவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஒரு வாரத்தின் பின்னர், ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவர் பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து மாணவியின் தந்தையை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது,அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மண்ணெண்ணெய் விற்பனை மூலம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளொன்றிற்கு ரூ.23 மில்லியன் நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார்.

தனியார் துறை ஊழியர்களின் சேவையை நிறைவு செய்தல், ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து விடுவிப்பதை தாமதப்படுத்தல் மற்றும உழைப்புச் சுரண்டலை நீடிக்க சட்டத் திருத்தமொன்று ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி