நாடு மிக விரைவில் திவாலாகும் அபாயத்தில் உள்ளது.நாட்டை காப்பாற்றி முன்னேறுவதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருட ஆரம்பத்தில் முன்வைக்கப்படும் என சமகி ஜனபலவேகய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

"நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்குப் பதிலாக உப பிரதேச செயலக காரியாலயங்களைத் திறப்பதற்கு இடமளித்தமை, அரசில் உள்ள மலையக பிரதிநிதிகளின் இன்னுமொரு இயலாமையின் வெளிப்பாடே" என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை முகாமைப்படுத்துவதற்காக துணை நிறுவனமொன்றை அமைக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அமைச்சர் உதய கம்மன்பில பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரபல பின்னனி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 73. இவர் பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர்பி.ராமையா பிள்ளையின் இளைய மகன் ஆவார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

தமிழர் பிரதேச பாதுகாப்புக்கு மனநோயுள்ளவர்களை  அரசாங்கம் அனுப்புகிறதா என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புத்தளம் - கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி, குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில், வீடும், வீட்டுடன் இருந்த சிறிய வர்த்தக நிலையமொன்றும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

தென்னிலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளுக்கு செல்வதற்காக விசேட பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலேசியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கடந்த வாரம் முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் அந்நாடு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

கொவிட் காரணமாக பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கி வரும் ஆறு நாடுகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று தமது நெருக்கடிக்கு தீர்வுகாண உதவியை பெற்றுக்கொண்டுள்ளன என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசாங்கம் தற்பெருமையில், நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டன் காரணமாக நாட்டை முற்றாக அதளபாதாளத்திற்குள் தள்ளியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா (Harsha De Silva) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசி உணவுப் பொருட்களடங்கிய 1500 கொள்கலன்கள் டொலர் விநியோகிக்காமையால் துறைமுகத்தில் காத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பி.பீ.ஜயசுந்தர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஊழியர்களை பணிநீக்கியமைக்கு எதிராக குரல்பொடுத்த ஒரு முன்னணி தொழிற்சங்கத் தலைவரை பணி நீக்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னிலையில் அத்துல களுஆராச்சி  இன்று (24) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி