அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பொது எதிரணி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று தெரிவித்தார்.


தேசத்தை வழிநடத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் விரும்புவதாக ஐக்கிய மக்கள் சக்தி நம்புவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


சஜித் பிரேமதாசவின் வேட்புமனுவை மக்கள் மற்றும் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் அங்கீகரித்து ஆதரவளிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி நம்புவதாகவும் அத்தநாயக்க செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


தேர்தலுக்கு வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சிக்கு விடுத்த சவாலுக்கு பதிலளித்த அத்தநாயக்க, "ஜனாதிபதி விரும்பினால் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை நடத்தலாம், நாங்கள் எந்த தேர்தலுக்கும் தயாராக இருக்கிறோம்," என்று கூறினார்.


உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடத்தில் நடத்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சஜித் பிரேமதாச மற்றும் எதிர்கால அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்கக் காத்திருக்கும் ஏனையோர் தமது பிம்பங்களை கட்டியெழுப்ப வேண்டும் என அதன் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கட்சிக் கூட்டமொன்றின் போது தெரிவித்தார்.


“எதிர்காலத்திற்கான நம்பிக்கை அளிக்கும் பிம்பங்களை உருவாக்காமல் கடந்த கால மகிமையைப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை, இந்த தலைவர்கள் தங்கள் செயல்திறனை வெளிப்படுத்த முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும்.” ”என்று பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா கூறினார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி