உலகின் பரபரப்பான வர்த்தகப் பாதைகளில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாயை, நான்கு கால்பந்து ஆடுகளங்களின் நீளம் கொண்ட ஒரு மாபெரும் கொள்கலன் கப்பல் அடைத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் ஏமாற்றத்தை தந்தாலும் சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானங்கள் எமக்கு பயன்படக்கூடியதாகவே இருக்கும். நிறைவேற்றிய நாடுகளும் நடுநிலமை வகித்த நாடுகளும் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தமது பங்களிப்பை வழங்குவார்கள் என்பதை நாம் நம்புகின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 54 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களது படகுகளையும் கைப்பற்றிய சம்பவம் மீனவர் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.54 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதை இலங்கை கடற்படையும் உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றின் நெருக்கடியினால் மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளில் தொழில்புரிந்து நாடு திரும்புகின்ற இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைத்து இலவச சேவையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மத்ரசாக்களும் தடை செய்யப்படாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சர்வதேச கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் இலங்கை வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது. சிங்கள மக்களுக்கு இதை எடுத்து கூற, முன்னாள் நல்லிணக்க துறைசார் அமைச்சர் என்ற முறையில் நான் கடமைப்பட்டுள்ளேன்.

சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியை ஒரு கிலோவுக்கு 50 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைத்ததன் மூலம் ரூ .1590 கோடி பாரிய வரி கொள்ளைக்கு அனுமதித்த அரசாங்கம் இதேபோன்று அரிசி மாபியா கொள்ளைக்கும் அனுமதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிப்பதில் இருந்து இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் விலகி இருந்தமையானது இலங்கையின் நன்மைக்காகவே அது சர்வதேச கருத்தை கையாளும் முயற்சி என்றும் இது வெற்றியின் அறிகுறியாகும் என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நிலையில் தென் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு ஜாதியினரை ஒட்டுமொத்தமாக தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. இம்மாதிரி ஜாதி ரீதியான அணி திரட்டல்கள் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு உதவுமா?

Feature

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மூலம் பொருளாதார தடை விதிக்க முடியாதென அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

Feature

சம்மாந்துறை உப பஸ் டிப்போ மற்றும் அதன் நிர்வாக சேவையை கல்முனைக்கு இடமாற்றும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, அதனை தரமுயர்த்தும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு

சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் அப்லடொக்ஸின் என்ற புற்றுநோய் ஊக்கி இதில் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரவினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் சங்கம் நேற்று (23) வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக குறுகிய தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றை வட கொரியா சோதனை செய்துள்ளது.

ஜெனீவா சமரில் கடந்த முறை இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகள் இன்று பின்வாங்கியிருப்பது ஆட்சியாளர்களின் பலவீனத்தை எடுத்துக்காட்டுவதாக ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி