ஒரு அமெரிக்க டொலருக்கு 20 ரூபாய் ஊக்க கொடுப்பனவு - நிதியமைச்சு தீர்மானம்
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய உணவு பொருட்களின் பற்றாக்குறையினால் பாதிப்படைந்து இருக்கவும் மக்களின் அழுகுரல்கள் எம்மை வருத்தமடைய செய்துள்ளதாக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஹிருணிகா பிரேமச்சந்திர, நிரோஷா அத்துகோரல இன்னும் சில பெண்களோடு இணைந்து வந்து ஜனாதிபதியின சிறிய வீட்டை சுற்றி மேற்கொண்ட போராட்டம் இலங்கையில் மிகப் பெரிய தலைப்பாகும். அது ஒரு முக்கியமான தலைப்பு மாத்திரமல்ல ஒரு சம்பவத்தின் ஆரம்பமாகும். ஐக்கிய மக்கள் சக்தியின தலைமைக்காரியாலயம் மீது நடத்தப்பட்ட கூல் முட்டைத் தாக்குதல் என்பது இதனுடைய ஒரு தொடராகவே இருந்திருக்க வேண்டும். ஹிருணிகாவின் வீட்டுக்கு மல தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இன்று ஊடகங்களில் காணப்பட்டது.
அரசாங்கத்தின் தவறான கொள்கை காரணமாக மக்கள் போராட்டமான வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, பொது நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை பொது சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, ரஷயாவில் உள்ள தனது 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக பிரபல உணவகமான மைக்டொனால்ட் அறிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்புக்களை அந்தநாட்டின் இராணுவம் தாக்கி அழித்துவரும் காணொலி வெளியாகி தற்போது பகிரப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இன மற்றும் மதக் குழுக்களாக, எந்தவொரு வகையிலும் எந்தவொரு இனத்தவரும் தனியாக நடத்தப்படக்கூடாது என்பதை தேசியக் கொள்கையாக்கி, சட்டமாக்குவதன் முக்கியத்துவம் குறித்து ஒரே நாடு - ஒரே சட்டம் குறித்த அரச தலைவரது செயலணி மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது மலக்கழிவு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.