இலங்கையின் நில சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் அனுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதை கண்டித்து 04 ம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தடுத்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் 4 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்த நாட்களில் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் பங்குபெற்ற பெண்களின் படத்தை பிரபல அமெரிக்க இதழான டைம் அட்டைப்படமாக வெளியிட்டுள்ளது.

கட்டாரில் தொழில்புரிந்த நிலையில் 6500ற்கும் அதிகமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கடந்த 10 வருடங்களிற்குள் உயிரிழந்திருப்பதாக கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளன.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு தெரியாமல் வழங்கப்பட்ட 22 வது தொகுதி  பற்றி பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அரசாங்கத் தலைவர்கள் ஒரு முடிவை எடுப்பார்கள் என்று ஜனாதிபதி சட்டத்தரணி ஜெனரல் ஹரிகுப்தா ரோஹனதீர கூறுகிறார்.

ஐ.எஸ் தலைவர் மற்றும் புலம்பெயர் தமிழ் தலைவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ரகசிய கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக மார்ச் 03 பாகியங்கல ஆனந்த சாகர தேரர் முன்வைத்த குற்றச்சாட்டை அடிப்டையாகக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்று (05) சி.ஐ.டி.க்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

ஆங்கில ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் கல்லூரியை வைத்திய பீடமாக மாற்றும் திட்டத்திற்கு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

குடும்பத் தகராறில் மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை பேராசிரியருக்கு மரண தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதென்ற விடயத்தில் இலங்கை அரசு தொடர்ந்தும் விடாப்பிடியாக உள்ளது.

எங்களை இந்தப் போராட்டங்களில் இருந்து இல்லாமல் செய்வதற்கும், உளவியல் ரீதியான தாக்கத்தைத் தந்து எம்மை அழிப்பதற்குமான முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் எங்கள் மீது மாத்திரமல்லாமல் எமது குடும்ப ரீதியிலும் இடம்பெற்று வருகின்றன என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

மியன்மாரில் ஒரு மாதம் முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் புதன்கிழமை ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அரசியலைவிட்டு ஒதுங்கிவிடுவதாகவும் தி.மு.கவின் ஆட்சி அமையவிடாமல் தடுக்க தொண்டர்கள் பாடுபட வேண்டுமென்றும் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி