உயர் நீதிமன்றம் வழங்கிய

உத்தரவின் காரணமாக வெற்றிடமான பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

பத்திநாயக்க பொலிஸ் திணைக்களத்தின் அடுத்த சிரேஷ்ட அதிகாரியாகக் கருதப்படுகிறார்.
 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள்குழுவினால் அவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.
 
இதனை பொலிஸ் ஆணைக்குழுவும் பொலிஸ் தலைமையகத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
 
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்கவுக்குப் பின்னர்
பொலிஸ் திணைக்களத்தில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான பிரியந்த வீரசூரிய, சஞ்சீவ தர்மரத்ன, சஜீவ மெதவத்த, தமிந்த ஸ்ரீ ராஜித, கித்சிறி ஜயலத், ரன்மல் கொடித்துவக்கு மற்றும் அஜித் ரோஹன ஆகியோர் சிரேஷ்டமானவர்களாவர்.
 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி