இந்தியாவுடனான  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் -  இரத்துச் செய்வதற்கான மனுக்கள்  தள்ளுபடி இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும்

இடையில் சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று (04) விசாரணையின்றி தள்ளுபடி செய்துள்ளது.

நீண்ட பரிசீலனைக்குப் பிறகு,  உயர் நீதிமன்ற நீதியரசர்களான  அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி  குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுவில் சட்டமா அதிபர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை  உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்துக்கு முரணானவை என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும்,  இது அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மீறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் அதில் கையெழுத்திடுவது சட்ட மீறலாகும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி, தங்கள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கவும், தொடர்புடைய ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கவும் கோரியுள்ளனர். மேலும், தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்காக 2 மில்லியன் ரூபா இழப்பீடு கோரியுள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி