பொலிஸ் மா அதிபர் தொடர்பான

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து அடுத்த இரண்டு நாட்களில் அமைச்சர்கள் ஆராய்ந்து

இதற்கான பதிலை அறிவிப்பது என இன்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், அந்தத் தீர்மானத்தில் பல சட்டச் சிக்கல்கள் இருப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

உண்மைகளை ஆழமாக ஆராய்ந்த பின்னர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள சட்ட சிக்கல்களுக்கு அமைச்சரவையின் பதிலை எதிர்வரும் இரண்டு நாட்களில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று மாலை அமைச்சரவைக்கு கிடைத்துள்ளதால், அது தொடர்பான சட்டச் சிக்கல்களை முழுமையாக ஆய்வு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் இரண்டு தினங்களில் அமைச்சரவையின் பதிலை அறிவிப்பதே சிறந்தது என்பது அமைச்சரவையின் ஏகோபித்த தீர்மானம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி