எஸ்.ஆர்.லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்

காலமாக தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (16) ஒரே நாளில் பெரியகமம் பகுதியில் உள்ள நான்கு வீடுகளில் திருட்டுக்கள்  இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் திருட்டு இடம்பெற்ற வீட்டில் இருந்த சீசீரிவி காணொளியை பார்வையிட்டபோது சந்தேகத்துகிடமான  ஒருவர் சொந்த வீட்டுக்குள் நுழைந்து  பொறுமையாக வீட்டை உடைத்து வீட்டில் உள்ள குளிர்பான பெட்டியில் இருந்து நீர் அருந்தி விட்டு வீடு முழுவதும் தேடுதல் நடத்தி நகைகளைத் திருடிச. சென்றுள்ளார்.

IMG 20240719 114938 800 x 533 pixel

இதேவேளை, குறித்த நபர் அருகில் இருந்த  மற்றொரு வீட்டிலும் எவ்வாறு புகுந்து அந்த வீட்டிலுருந்த  பல லட்சம் பெறுமதியான நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் திருட்டில் ஈடுபட்ட பின்னர் வெளியில் வந்து கதவை உடைத்த போது கதவில் உள்ள கை ரேகை அடையாளங்களை இல்லாது செய்யும் நோக்குடன் தண்ணீரால் துடைக்கும் காட்சியும்  சீசீரிவியில் பதிவாகி உள்ளது.

மன்னார் சாவற்கட்டு பகுதியிலேயே இந்த நான்கு திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த வீட்டார் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி