ஓமான் கடற்பரப்பில் மூழ்கிய

எண்ணெய்க் கப்பலிலிருந்து 9 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும்  ஒருவரின்  சடலமும் கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு விபத்துக்குள்ளான கப்பலின் பணிக் குழுவில் 13 இந்தியர்களும் 3 இலங்கையர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 8 இந்தியர்களும் ஒரு இலங்கையரும் மீட்கப்பட்டது.
 
இந்த நிலையில் காணாமல்போயுள்ள ஏனைய பணிக் குழாம் உறுப்பினர்களை மீட்பதற்காகவும் கப்பல் ஒன்றையும் விமானம் ஒன்றையும் இந்திய கடற்படை அப்பகுதிக்கு அனுப்பியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
 
குறித்த கப்பலில் மொத்தமாக 16 பேர் பயணித்திருந்த நிலையில், மீதமுள்ள நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக ஓமனுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி