ஜனாதிபதியின் பதவிக் காலம்

தொடர்பில் உயர் நீதிமன்றில் கூட இல்லாத பிரச்சினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் திகதிகளின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
மேலும் கருத்து தெரிவித்த  அநுரகுமார திஸாநாயக்க,
 
“ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
 
அதன்படி, செப்டம்பர் 28ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விடும் என்று நான் உணர்கிறேன்.
 
ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 அல்லது 6 என்ற கேள்வி உயர் நீதிமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் கேட்கப்பட்டுள்ளது.
 
ரணில் விக்கிரமசிங்க வேறு யாரையும் அனுப்புவார் என நான் நினைக்கவில்லை.
 
அனுப்பினால் நிச்சயம் 10 இலட்சம் அபராதம்.
 
இப்போது ரணிலுக்கு இது ஐந்தா அல்லது ஆறா என்று இன்னொரு பிரச்சினை. எங்களிடம் அது இல்லை.
 
இந்த அரசியலமைப்பில் ஐந்து மற்றும் ஆறு என்று இரண்டு இடங்களில் கூறப்பட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
 
எனவே, அரசியலமைப்பு திருத்தம் தேவை.
 
இப்போது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு.
 
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவால் எந்த முடிச்சும் போட முடியாது, கடைசியில் விட்டால், கழுத்தில் உள்ள டைதான் மிச்சமாகும் என்றும் அவர் கூறினார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி